(வ.உ.சிதம்பரனாரின் மெய்யறம் 39(2.09).  தொடர்ச்சி)

 

 மெய்யறம்

இல்வாழ்வியல்

 

  1. பெரியாரைத் துணைக்கொளல்


  1. பெரியா ரரியன பெரியன செய்பவர்;

பெரியவர் என்பவர் செய்வதற்கு அரிய, மிக உயர்ந்த செயல்களைச் செய்பவர்;

  1. பொறியா ளுளத்தை யறிவா லாள்பவர்;

மேலும் ஐம்புலன்களின் கட்டுப்பாட்டில் உள்ள மனத்தைத் தமது அறிவின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்;

  1. இகபர வியலெலா மெண்ணிநன் கறிந்தவர்;

மேலும் இவ்வுலகத்தின் இயல்பினைப் பற்றியும் இறைவனைப்பற்றியும் நன்கு அறிந்து இருப்பவர்;

394.நல்லின வியலெலா நண்ணி நிற்பவர்;

மேலும் நல்லினப் பண்புகளை எல்லாம் பெற்றிருப்பவர்;

  1. பின்னுறுந் தீங்கெலா முன்னறிந் தொழிப்பவர்.

மேலும் பின்னால் வரப்போகும் தீமைகளை முன்னரே அறிந்து அதை நீக்குபவர் ஆவார்.

  1. அவரது துணைகொள லரும்பெருங் காப்பு.

பெரியவர்களின் துணையைப் பெறுவது மிக அரிய உயர்ந்த பாதுகாப்பு ஆகும்.

  1. அவரை யறிந்துகொண் டநுதின மோம்புக.

அவரது பெருமைகளை அறிந்து அவரை எப்பொழுதும் போற்றி வாழுதல் வேண்டும்.

  1. அவர்க்குரி யனவெலா மன்பொடு வழங்குக.

அவருக்குத் தேவையானவற்றை அன்போடு வழங்குதல் வேண்டும்.

  1. அவரோ டெண்ணியே யனைத்துஞ் செய்க.

அவருடன் ஆலோசனை செய்தே அனைத்துச் செயல்களையும் செய்தல் வேண்டும்.

  1. அவருரை பிழையா தியாங்கணு மொழுகுக.

அவருடைய அறிவுரைகளின் வழியே எப்பொழுதும் நடத்தல் வேண்டும்.

வ.உ.சிதம்பரனார்