
அகமே நீ வாழ்த்துக!
கதிரவன் கிரணக் கையால்
கடவுளைத் தொழுவான் புட்கள்
சுதியொடும் ஆடிப் பாடித்
துதிசெயும் தருக்க ளெல்லாம்
பொதியலர் தூவிப் போற்றும்
பூதம்தம் தொழில்செய் தேத்தும்
அதிர்கடல் ஒலியால் வாழ்த்தும்
அகமேநீ வாழ்த்தா தென்னே
மேதை வேதநாயகம் பிள்ளை: நீதித்திரட்டு

Leave a Reply