bharathidasan10

அன்னைத் தமிழை அரியிருக்கை

அமர்த்த வுழைத்த அடலேற்றை

முன்னே நுழைத்த மூடமெலாம்

முறிக்க இசைத்த முறையூற்றைப்,

பொன்னை நிகர்பா புரிந்திசையார்

புரட்சிக் கவியைத் தமிழ்ப் பேற்றைச்,

சென்னை நகரில் சிறையெடுத்துச்

சென்ற தேனோ சிறு கூற்றே?

–           காரை. இறையடியான்

– குறள்நெறி: வைகாசி 2, 1995 / மே 15. 1964