
நீர் காண்பதுபோல் நான் காண ….
ஊர் முழுதும் சொத்தும் கேளேன்;
உணவு, உடை, வீடும் கேளேன்;
பார் புகழும் பேரும் கேளேன்;
பரிசு, பொருள் என்றும் கேளேன்.
நீர் காணும் காட்சியைத்தான்,
நான் காண விரும்புகின்றேன்.
நேர்மையாய் பார்க்கும் இறையே,
நெஞ்சில் உம் ஆவி கேட்டேன்.
-கெர்சோம் செல்லையா.
Leave a Reply