chunnam01
மந்தையின் மாடு திரும்பையிலே-அவள்
மாமன் வரும் அந்தி நேரத்திலே
குந்தி இருந்தவள் வீடு சென்றாள்-அவள்
கூட இருந்தாரையும் மறந்தாள்!

தொந்தி மறைத்திட வேட்டிகட்டி-அவன்
துாக்கி வந்தானொரு வெல்லக்கட்டி
இந்தா எனக் கொடுத் திட்டாண்டி-அவன்
எட்டு ஒரே முத்தம் இட்டாண்டி!

கட்டி வெல்லத்தைக் கசக்கு தென்றாள்-அவன்
கட்டாணி முத்தம் இனிக்கு தென்றாள்
தொட்டியின் நீரில் குளிக்கச் சொன்னாள்-அவன்
தோளை அவள் ஓடித் தேய்த்து நின்றாள்

கொட்டிய நீரில் குளிர்ச்சி உண்டோ-இந்தக்
கோடை படுத்திடும் நாளில்? என்றாள்
தொட்டியின் தண்ணீர் கொதிக்கு தென்றான்-.நீ
தொட்ட இடத்தில் சிலிர்க்கு தென்றான்.

bharathidasan05