sudar04

வளம் பகிர்வோம்

வளங்களெல்லாம் கேட்காமல் இயற்கைதந்த கொடையே!
வடிவுமாற்றி பயன்கொள்ள போராட்டம் ஏனோ?
வளம்கொள்ள எல்லையேது? வரன்முறைகள் காண்போம்;
வாழ்வறிந்து வாழ்ந்திடுவோம்; வாழவைப்போம் இணைந்து;
வளம்மறுத்தும் போர்காணா மனம்உயர்ந்த மக்கள்
வாழ்வதற்கு வாய்ப்பளித்து மானுடத்தில் மகிழ்வோம்;
எளிமையினை கடைபிடித்து பொருள்கொள்ளல் குறைப்போம்;
எல்லையின்றி அருட்கருத்தை சொல்செயலில் பகிர்வோம்.

 – சுமதி சுடர், பூனா