(பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 7/8 – தொடர்ச்சி)

பல்துறையில் பசுந்தமிழ் : அறிவியல்தமிழ் 8/8

 

 

தொல்காப்பி    யர்மொழியை  வள்ளு  வர்தம்

தொல்குறளை    கம்பர்சொல்   கவிந  யத்தை

உள்ளத்தை   உருக்குகின்ற   தேவா   ரத்தை

உரிமைப்பா   பாரதியை   தாசன்  தம்மை

எல்லைக்குள்   இல்லாமல்   ஞால   மெல்லாம்

எம்மொழியில்   படிப்பதற்கும்   இணைய   மென்னும்

நல்வலையுள்   வளங்களுடன்   நுழைந்த   தாலே

நற்றமிழோ    உலகமொழி   ஆன   தின்று !

 

 

பிறமொழியின்   அறிவெல்லாம்   இணையத்   தாலே

பிறக்குமினி   தமிழினிலே!   உலகந்   தன்னில்

சிறகடிக்கும்   புதுமையெல்லாம்   ஒருநொ   டிக்குள்

சிறப்பாகத்   தமிழினிலும்   பூக்கு   மின்று

வரவாகித்    தமிழுக்கே   அணியைச்   சேர்க்கும்

வளம்பெற்ற   மொழியாகத்   தமிழு   மோங்கி

கரம்பிடித்து    நமையழைத்தே    உலக   ரங்கின்

கண்களிலே   தமிழகத்தை   உயர்த்தி   வைக்கும் !

 

பாவலர் கருமலைத்தமிழாழன்

9443458550

ஒசூர் தமிழ் வளர்ச்சி மன்றம்

சித்திரைத்திருவிழா  கவியரங்கம்

நாள்:  சித்திரை 02, 2048 / 15 -4 – 2017

தலைமை :  முனைவர் ஆனைவாரி ஆனந்தன்

தலைப்பு :  பல்துறையில் பசுந்தமிழ்