ஆ.வெ.முல்லைநிலவழகன்

ஆ.வெ.முல்லைநிலவழகன்

 

பாடு சிட்டே பாடு ! பண்பாடு ! :

காட்சி -4

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு

இடம்      :     குருவிக் கூடு

நிலைமை  :     (நாடகம் காண வந்தோரைப்

பேடது கண்டு திகைக்கின்றது)

பெண்   :           இன்றென்ன! வருவோர்! போவோருமாக

                   நன்றே! தெருவினில் மக்கள் கூட்டம்?

ஆண்     :        பொங்கல் திருநாள் நாடகமன்றோ?

எங்கும் அதுதான்; இத்தனைக் கூட்டம்!

                “தமிழ்த்தாய்’ என்பது நாடகப் பெயராம்?

                        அமிழ்தாய் இங்கு உரைத்தார்! சிலர்தான்

பெண் :   தாவியே வாசலில் இருக்கின்ற

பூ அரசமரத்திற்கே

சென்றே கிளையில் நாம் அமர்ந்து!

நன்றே பார்ப்போம் நாடகத்தை!

ஆண்      :    பொறுமையாய்க் கொஞ்சம் இருந்தாலென்ன?

சிறிதுநேரம் தாழ்த்தியே செல்வோம்!

பெண்     :     கவிஞரும் அவரும் போய் விட்டாரே

கவனித்தாயா? இல்லையா? சொல் நீ

ஆண்     :     சேச்சே ஒன்று பிடித்தால்! உடனே நீ

மூச்சுபோல தொடர்ந்து பிடிப்பாய்!

பெண்     :ஊதலும் வேகமாய் ஊதுது! பார்! நீயே

கசமுசவென்ற பேச்சையும் கேள்! நீயே

விளக்கும் அணைந்ததே! தெரியலையா?

விளக்கமாய் இன்னும் சொல்லணுமா?

 

(காட்சி முடிவு)

 two-sparrows04

(பாடும்)