sparrowa79 (சித்திரை 27, 2046 / மே 10, 2015 தொடர்ச்சி)

காட்சி – 24

அங்கம்    :     அருண்மொழி, பூங்குயில்

இடம்      :     அருண்மொழி இல்லம்

நிலைமை  :     (ஒப்பனைக்காக அருண்மொழி, அனைத்தும்

தப்பாது வாங்கி இல்லம் வருதல்)

அரு   :   கொடியே! நீ! வருக!

கோவில் நாம் செல்வோம்

நொடியும் இனி இல்லை

புரிவாய்! நீ கண்ணே!

பூங்   :    வாடா மலர்ப் பட்டோ!

காஞ்சி செம்பட்டோ!

தேடி நான் கட்டி

வருகிறேன் அத்தான்!

அரு   :   வீடே ஒரு கடையாய்

இருந்ததும் நீ! என்ன!

தேடி நீ கட்டி

வருகிறேன்! என்றாய்!

பூங்   :    இருந்தென்ன பண்ண?

இருக்கும் பட்டெல்லாம்

இரு மூன்று மாத

பழசல்லோ அத்தான்

அரு   :   முன்பே நீ! சொல்லக்

கூடாதா கண்ணே!

என்ன! இப்போதும்

கேடில்லை உடன் நீ

வேண்டுவதெல்லாம்

விள்ளவே வேண்டும்

தூண்டி நீ பின்பு

சொல்லுதல் வேண்டாம்.

பூங்  :     கச்சோட்டுப்பட்டுப்

பாவாடை ஒன்றும்

பச்சை நிறப் பொட்டு

சிமிழ் நீ! ஒன்றும்

உடனே சொல்ல

மறந்தேனே! அத்தான்

அடுக்குமல்லிகை

சடைப்பூவொன்றும்

நேரமோ ஆனால்

விடுதிக்கும் செல்வோம்!

யாரேனும் உடன் நீ!

அனுப்புக! அத்தான்!

அரு  :     அனைத்தும் நான் செய்வேன்!

ஆனாலும் நீயோ!

நினைத்து நீ! மீதி

உடுத்துதல் வேண்டும்!

நகைகளைப் பூட்டத்

தொடங்கு நீ முன்னே!

அவையோ உடனே

வந்தேகும் பாரேன்!

பூங்  :     தலையலங்காரம்

செய்தபின் அதனைக்

கலையாகச் செய்வேன்

செல்க! நீர்! உடனே

குறும்பத்தான் உனக்கு!

விரும்பும் இது பொழுதா?

பொறுமையே இல்லை!

விடுங்களேன்! என்னை!

(காட்சி முடிவு)

– பாடும்

aa.ve,mullainilavazhagan