மலரினும் மெல்லியது காதல் !

மலரினும் மெல்லியது காதல் ஆனால்
மலையினும் வலியது காதல் !

ஒருவன் ஒருத்தியை நேசித்து விட்டால்
உயிர் உள்ளவரை நேசிப்பது காதல் !

தடைகள் ஆயிரம் வந்த போதும்
தகர்த்து இணைவதே உண்மைக் காதல் !

புறஅழகுப் பார்த்து வருவது அல்ல காதல்
அகஅழகு ஈர்த்து வருவதே மெய்யான காதல் !

என்னவென்று விளக்கமுடியாவிடினும்
ஏதோ ஒன்று இணையிடம் பிடித்து இருக்கும் !

இடையில் வந்தவள் என்றபோதும் மன
எடையில் உயர்ந்து நிற்பவள் காதலி !

உன்னத காதலிக்கு உள்ளத்தில் முதல் இடம்
உலகில் உள்ள உறவுகளுக்கு அடுத்த இடம் !

முதல் காதல் நினைவு என்பது இருவருக்கும்
மூச்சு இருக்கும் வரை நினைவு இருக்கும் !

உடலில் உயிர் உள்ளவரை இருவருக்கும்
உடலில் மூளையின் மூலையில் இருக்கும் !

காதல் உணர்வு என்பது சொல்லில் அடங்காது
காதலித்தவர்கள் மட்டுமே உணரும் உணர்வு !

காதலிக்கும் காலத்தில் உள்ள மனமகிழ்வு
காதலர்களுக்கு மண்ணில் காணும் சொர்க்கம் !

நேற்று இன்று நாளை என்று முக்காலமும்
நிலைத்து இருக்கும் ஒன்று ஒப்பற்ற காதல் !

கவிஞர் இரா .இரவி

(பெங்களூருத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு)

http://www.eraeravi.blogspot.in/