55door_to_science

                      அறிவியல் வாசலில் தமிழ் 

முக நூலில்
முகமறியா ஒருவன் கேட்டான்
என்ன உண்டு தமிழில் – சொன்னேன்

தமிழ் . . .

அணுவைத் துளைத்தலை
அன்றே சொன்ன அவ்வை மொழி.
உலகம் இயங்க உரக்க முழங்கிய
வள்ளுவன்  வாய் மொழி.

உடற் பிணி குறைய , மனக்குறை  மறைய
சமூகம்  பற்றி , சரித்திரம் பற்றி
சொல்லாத பொருள் உண்டோ தமிழில் ?

வளம் உண்டு.
நயம் உண்டு –  என்றாலும்
அறிவியல் தேடலில் , தேவையில்
தேயுமோ தமிழ் மொழி ?  – ஒரு குரல்.

ஆங்கிலமும் அஞ்சிட – இணையத்தில்
அச்சாரம் இட்டது தமிழ் மொழி.

பயன்பாடு குறைந்தாலும்
பல மொழி கலந்தாலும்
பயம் வேண்டா தம்பி !

தமிழில் படி – முதலில் தமிழைப் படி !!

கலைச் சொற்களை உருவாக்கு.
தமிழினை வளமாக்கு.
நாளும் ஒரு புத்தகம் படி – மொழி
புத்தாக்கத்திற்கு அதுவே முதற்படி.

உணர்வுகள் உரமானால்
கனவுகள் கை கூடும்.

விழுதுகள் வேர் பிடித்தால்  . .
தமிழ் வழி கற்றால் . .
தமிழ் உணர்வு பெற்றால். .

அறிவியல் வாசலில்
அரியாசனம் இட்டு
அமரும் எம் தமிழ் மொழி – இது உறுதி !

 
— கு. செ. சிவபாலன்
ஆராய்ச்சி வளமையர் -வேளாண்மை
 வேளாண் கல்லுரி, திருச்சிராப்பள்ளி.

agri_sivapalan01