இனிது இயற்கைக் குளியல்

இனிக்கும் இன்பக் குளியல்
இனிது இயற்கைக் குளியல்
குளம், ஏரிக் குளியல்,
உளம் விரும்பும் குளியல்;
உள்ளங் கால் தொட்டதும்,
உள்ளம் உடம்புள் துள்ளும்;
உடல் முழுதும் சிலிர்க்கும்;
உடல் நீரில் மூழ்கப்,
பற்கள் வாத்திய மாக
பண் ணொன்று பிறக்கும்;
இழுத்து பிடித்த உணர்வை,
ஓடை இழுத்துக் கொண்டு
ஓடும்; குழந்தை மனம்
ஓங்கும், அக்கம் பக்கம்
மறக்கும், பரவசம் பிறக்கும்;
நீரில் உள்ள வரை
நிலைக்கும், நிலை குலைய
வைக்கும்; உடல் மிதக்கும்
வரை உள்ள சுகம்
நீர்த் தரும்பிர சாதம்;
குல தெய்வக் கோயில்
குரு தெய்வக் கோயில்
குளத்தில் குளிக்கும் போது
மட்டும் கிட்டும் இன்பம்பே ரின்பமே!

ஏரி குளம் குட்டை யெலாம்
வீட்டைக் கட்டி வைக்க
வரும் அடுத்த தலைமுறை
இயற்கைக் குளியல் மகிழ்விக் காதே..!

அழுக் கை நீக்கக் குளியல்
மட்டு மல்ல குளித்தல்
நீர்ப்பி ராணன் எடுப்பதும்
சூரிய சக்தி பிடிப்பதும்
குளித் தலின் நோக்கமே
கதிர் உதிக்கும் முன்னமே
குளிர் நீரில் குளிக்கவே
நீர் ஞாயிறு சக்தி கிட்டுமே..!

எவ் வூர் தண்ணி யிலும்
எப் பருவ மானா லும்
முதல் மூன்று முறை உள்ளங்
கையில் நீரள்ளி நிதான மாய்
உதடால் உறிஞ்சி யுறிஞ்சிக் குடிக்க
உடம்பு நீரைச் சோதிக் கத்தக்க
நோய் எதிர்ப்பு உண்டாக் கப்பின்
முங்கி முங்கி நாள் முழுதும்
குளித்தா லும்ஊ றொன்று நேரா
வுடபிற் கேயிது முன்னோர் வாக்கே!

– சுதாகர்

http://subhastories.blogspot.in/2016/06/blog-post_18.html