tamizh_kumari-01

எங்கள் குலத் தெய்வம் தமிழ்

பங்கயத்துக் குமரிமுனைப் பாதம் சேர்த்தாள்

பசும்பொன்முடி வேங்கடத்தைப் புனைந்தாங்கார்த்தாள்

பொங்கிவரும் காவிரியை இடையில் கோத்தாள்

புரமூன்றும் கடற்கன்னி பணியப் பார்த்தாள்

மங்கலம் சேர் மேலைமலைச் செங்கோ லுற்றாள்

எங்கள் குலத் தெய்வம் தாய்

– கவியோகி ச.து.சுத்தானந்த பாரதியார்: தமிழ்க்குமரி