(திருத்தமிழ்ப்பாவை – பாசுரங்கள் 1 & 2 :தொடர்ச்சி)

 

திருத்தமிழ்ப்பாவை

பாசுரங்கள் 3&4

 

 மூன்றாம் பாசுரம்

தமிழின் உடலும் உயிரும்

ஓங்கு பெருஞ்சக்தி உள்ளுறை அங்கமெனத்
தாங்கும் இருநூற்று நான்பத்தின் ஏழெழுத்து;
தூங்காப் புலன்மிக்கார் சூத்திரமாய்ச்
செய்தவுயிர்;
மூங்கில் குழலோசை மேவுகிற செம்மொழியாள்!
நீங்கா இயற்கைபோல் நீணிலத்தில் வாழும்தாய்!
ஈங்கவள் நல்லருளை ஏற்பதற்கு வான்மீது
வீங்கொளியன் ஏகுமுன், நாம்விரைவோம்;
ஆங்காலம்
தூங்காது வம்மின் தொடியணிந்தே, எம்பாவாய்!
நான்காம் பாசுரம்

சங்கம் வளர்த்த மொழி

வில்லார், புலியார், கயலார் முடிவேந்தர்
வெல்வார் செருக்களத்து வேற்றுமண்
வேந்தர்களை;
சொல்வார் அவர்வென்றி தூய புலவோர்,தாம்
இல்லார் எனினும் இனியதமிழ் மாதனத்தார்;
நல்ல மதுரைக்கோன் நட்டமுச் சங்கமதில்
வல்லார் வளர்த்தமுது வண்டமிழை வாழ்த்தாமல்
பொல்லா உறக்கம் புகழாமோ மெல்லியலே!
மெல்லினும் மெல்லியலாள் முத்தமிழே,
எம்பாவாய்!

– கவிஞர் வேணு குணசேகரன்

 

கவிஞர் வேணு குணசேகரன்

கவிஞர் வேணு குணசேகரன்