குதூகலித்தே ஆடுவாய் !

குதித்தாடிக் குதித்தாடிக்,
குதூகலித்தே ஆடுவாய் !
குமிழ்ச் சிரிப்புக் காட்டியே,
குறுநகையும் புரிவாய் !

குதித்தாடும் காலமிது,
குறை எதுவும் வைக்காதே !
சிறை பூட்டும் காலமதில்,
கால் விலங்கும் பூட்டிடுவார்.

எதற்கென்றும் அஞ்சாதே !
எவரிடமும் கெஞ்சாதே !
குமிழ்ச் சிரிப்பை சதங்கையாக்கி,
குதூகலமாய் நடனமிடு !

– கே. கமலசரசுவதி