தக்காரைப் போற்று!

தக்காரை நெஞ்சாரப்

            போற்ற வேண்டும் – ஆற்றல்

மிக்காரை அரியணையில்

            ஏற்ற வேண்டும்.

தமிழ் காக்கும் நல்லோரைக்

            காக்க வேண்டும் – அதுவே

தமிழ் வளர நாமாற்றும்

            சேவை யாகும்.

தமிழென்றும் தாழ்வின்றி

            தழைக்க வேண்டும் – அந்தத்

தமிழ்ச் சேவை செய்துஉயிர்

            வாழ வேண்டும்.

எக்காலும் இந்நோக்கில்

            மாற்றம் இன்றி – வாழ்வில்

ஏற்றமுடன் பணியாற்றும்

            ஆற்றல் வேண்டும்

என்றெம்மை ஈன்றவளை

            என்றும் போற்றி – தக்காரின்

ஈடில்லா அன்பிற்கு

            அடிமை யாவோம்!

முனைவர் பொறி. மு. பொன்னவைக்கோ