salai ilanthiraiyyan

அணைக்கட்டால் மறித்தாலும் வாய்க்காலாகி

                அதிகவளம் தருகின்ற ஆற்றைப் போல

இணையில்லா ஈகத்தால் எளியோர் தம்மை

                ஏற்றெடுத்துக் காப்பாற்றும் சான்றோர் போல

கணிப்பரிய பெரும்புகழை ஈட்டி வைத்துக்

                காலத்தை வென்றிருக்கும் தமிழி னோடு

தணிப்பரிய அன்புடனே பழகு கின்றேன்

                தனியன்புத் தாயன்பைக் காணு கின்றேன்.

– சாலை இளந்திரையன்: தாய் எழில் தமிழ்: தாய்மொழி: 14