56francekamban_makalirani

தூததும் நினைவே அன்றோ ! – திருமதி சிமோன் 

 tmt.seemon,france01

 காலமோ மாறி ஓடும்

  கற்பனை, சுவையும் மாறும் !

ஞாலமோ சுமையை வாழ்வில்

  நாளுமே ஏற்றி வைக்கும் !

பாலமாய் நின்று தாங்கும்

  பாசமும் மறைந்து போகும் !

தூலகம் (விடம்) நிறைந்த போதில்

  தூததும் நினைவே அன்றோ !

 எண்ணும் பொழுதில் விளையாடும்

  இளையோர் நினைவும் அதிலன்றோ !

வண்ணம் மின்னும் காதலதும்

  வாழ்வில் மாந்தர் நினைவன்றோ !

திண்ணம் முதியோா் கனவெல்லாம்

  தேடும் வம்ச வளமன்றோ !

சுண்ணம் (தூசு) போன்று மறைந்தேகி

  தொடரும் கடிதோர் நாளன்றோ !

 அலைபாயும் நினைவுகளோ ஆயிரங்காண் ! ஆங்கே

  அலைக்கழியும் மனமதிலே அடுக்கடுக்காய் முற்றும்

கலையாத கனவுகளும், காணுகின்ற உறவும்,

  கண்டுவிட்ட பிரிவினிலே கனக்கின்ற உணர்வும்

நிலையாக நின்றாடி நிம்மதியைத் தொலைக்கும் !

  நீக்கமற நிறைந்துவிடும் நினைவுக்கே என்றும்

விலையாகக் காலமதை வீணுக்கு இறைத்தே

  விரைகின்ற வாழ்வினிலே வரவொன்றும் இலையே !

– திருமதி சிமோன்

56runningclouds