Sudar8b

வளம்பறிக்கும் நிலை

வளம்பறித்து வாழ்பவர்கள் மனம்விரியாச் சிலர்தான்
வறியவர்கள் பெருகிவரக் காரணமும் இவர்தான்
உளச்சோம்பல் உடற்சோம்பல் போக்காமல் வாழ்ந்தால்
உற்றாரைத் தளைப்படுத்தி உலகவாழ்வை முடிப்போம்
உளம்சுருங்கும் உறவுபொய்க்கும் சினம்பெருகும் நாளும்
உருக்குலையும் சேர்த்தபொருள் ஓயாத இடர்தான்
வளம்காக்க போராட்டம் முறையற்ற வாழ்க்கை
வாழ்வறியார் அடியொற்றி வாழ்பவரும் உண்டு

 – சுமதி சுடர், பூனா