தலைப்பு-நூல் என்றால் திருக்குறளே-மு.க. :thalaippu_nuul endraal_thirukkural_mu,karunanidhi

நூல் என்றால் திருக்குறளே!

ஈராயிரம் ஆண்டின் முன்னும் இன்றுபோல்

இளையவளாய் இருந்திட்ட தமிழாம் அன்னை

நூறாயிரம் கோடி என ஆண்டு பல வாழ்வதற்கு

நூலாயிரம் செய்திட்ட புலவர்களை ஈன்றிட்டாள் எனினும்;

கலைமகளாம் நம் அன்னை வள்ளுவனைத்

தலைமகனாய்ப் பெற்றெடுத்தாள்.

மலர் என்றால் தாமரைதான்

நூல் என்றால் திருக்குறளே

எனப் போற்றும் அறப்பனுவல்

அளித்திட்டான்; மாந்தரெல்லாம் களித்திட்டார்.

  • கலைஞர் மு.கருணாநிதி:
  • இரவலாக உன் இதயத்தைத் தந்திடண்ணா