(மார்கழி 20, 2045 / சனவரி 04, 2015 தொடர்ச்சி)

பாடு சிட்டே பாடு ! பண்பாடு !

aa.ve.mullainilavazhagan

காட்சி – 6

அங்கம்    :     ஆண் சிட்டு, பெண் சிட்டு

இடம்      :     குடில் முன் உள்ள மரக்கிளை

நிலைமை  :     (நாடகம் பற்றிய கருத்துரையில்

பேடும் சிட்டும் ஈடுபடல்)

ஆண் :     நாடகம் எப்படி உள்ளது சொல்?

பேடே! நீயும் பெண் தானே!

பெண் :     எனக்கென்னத் தெரியும்! நான் சொல்ல?

    உனக்கெதும் தெரிந்தால் சொல்லிவிடு!

ஆண் :     நடப்பிற்கும் நாடகக் காட்சிக்கும்

பிடிப்பே இல்லையாய்ப் பலரிங்கு

சுடுமொழி கொண்டே தமக்குள்ளே      கடுமையாய்

உரைக்கின்றார்! பார்த்தாயா?

பெண் :     கேட்டேன்! நானும்! இருந்தாலும்

போட்டேன்! உமக்கு புதிராக!

(வார்த்தையைப் பொரிக்கும் பேடங்கே

நேர்த்தியாய் உரையை முடித்ததனால்

சேர்த்து அணைக்க ஆண்சிட்டு

கோர்த்தே அணைத்தது பெண்சிட்டு)

பெண் :     சரி! சரி! போதும்! விளையாட்டு

உரைக்கின்றார் கவிஞர்! ஏதோ! தான்!

(உரிமையில் கொஞ்சியே அடங்கியது

உற்றுக் கேட்கவும் எண்ணியது)

(காட்சி முடிவு)

two-sparrows05

(பாடும்)