flowergirl01

சேர்த்துக் கட்டிய முல்லை வேண்டு மென்றேன்-நல்ல
சேயிழை அவள் சிரிப்பு முல்லை தந்தாள்!
பார்த்துப் பறித்த தாமரைப்பூத்
தீர்த்து விலைக்குக் கொடடி என்றேன்

பூத்த முகத் தாமரையாள்
புதுமை காட்டி மயங்கி நின்றாள் சேர்த்து…..
தேவையடி தாமரை இதழ் என்றேன்
தேனொழுகும் வாயிதழ்மலர் ஆகின்றாள்-ஒரு

பூவைக் காட்டிப் சேர்சொல் என்றேன்
பூவை “என்பேர் பூவை” என்றாள்!
ஆவல் அற்றவன் போல் நடந்தேன்
அவள் விழிதனில் அலரி கண்டேன் சேர்த்து….
காவல் மீறிக் கடைக்கு வந்து விழுந்து – பலர்
கண்பட வாடிய மருக்கொழுந்து நீ !

மேவா தடி என்று சொன்னேன்
வேங்கையில் ஈ மொய்க்கா தென்றாள்
தேவைக்கு மணம் வேண்டும் என்றேன்
திருமணம் என்று தழுவி நின்றாள். சேர்த்து….