(பூங்கொடி 9  – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை- தொடர்ச்சி)

பூங்கொடி

பழியுரை காதை

ஊரார் பழிமொழி

இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை

வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ?

35செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப்

பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி

ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு

அருண்மொழி அலருக்குக் கூசாமை

அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்;

பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும்

40 நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே;

ஆருயிர்த் தோழி! அந்நாள் வடிவேற்

பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்

கொழுநர் என்று கொண்டபின் ஊரார்

இழிசொல் எத்துணே ஏசினர் அறியாய்?

45  கலப்பு மணத்தைக் கடிந்துரை யாடினர்

கலைத்தொழில் புரிந்தேன் கற்பினைப் பழித்தனர்

மலைத்திலேன் சிறிதும், மனமுங் கூசிலேன்;

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி