(யாதும் ஊரே யாவரும் கேளிர் 7/8 – தொடர்ச்சி)

யாதும் ஊரே யாவரும் கேளிர் 8/8

உயிர்பறிக்கும்    குண்டுகளைச்    செய்வோ   ரில்லை

உயிர்மாய்த்து   நிலம்பறிக்கும்   போர்க   ளில்லை

உயர்சக்தி   அணுக்குண்டு   அழிவிற்    கின்றி

உயர்த்துகின்ற   ஆக்கத்தின்   வழிச   மைப்பர்

உயரறிவால்   கண்டிடித   விஞ்ஞா   னத்தை

உயர்வாழ்வின்   மேன்மைக்குப்  பயனாய்ச்   செய்வர்

அயல்நாட்டை   அச்சுறுத்தும்   இராணு   வத்தின்

அணிவகுப்பும்   போர்க்கருவி   இல்லை  அங்கே !

 

வான்மீது   எல்லைகளை   வகுக்க   வில்லை

வாரிதியில்   கோடுகளைப்    போட   வில்லை

ஏன்நுழைந்தாய்   எம்நாட்டு    எல்லைக்   குள்ளே

என்றெந்த    நாட்டினிலும்   கேட்போ   ரில்லை

தேன்சிந்தும்   மலர்மணத்தைச்    சொந்த    மென்று

சொல்கின்ற   முட்டாள்கள்    இல்லை   அங்கே

கூன்முதுகில்   இருப்பதன்றி    அறிவு   தன்னில்

கூன்விழுந்த   குறுமனத்தார்   இல்லை   அங்கே !

 

இரண்டாம்  உலகத் தமிழ் எழுத்தாளர்  மாநாடு

இடம் இராசரத்தினம் கலையரங்கம், அடையாறு, சென்னை.

நாள்  : வைகாசி 26, 2048 /  09 06 2017

கவியரங்கம்

தலைமை   கவியரசு  ஆலந்தூர் மோகனரங்கம்

தலைப்பு யாதும் ஊரே யாவரும் கேளிர்

பாடுபவர் பாவலர் கருமலைத்தமிழாழன்