எனக்குரியவள் நீ ! 

 

பெண்ணே !  நீ என்னை

நேசிக்கிறாயா ?

நானுனக்குத் தேவை யாயின் என்மேல்

நம்பிக்கை வைத்திடு !

என்னவளாய் நீ இருந்திட

எனக்குத் தேவை நீ !

“நலம் தானா,” என்று நீ

என்னைக் கேட்டால்

நலமென்று விடை சொல்வேன் !

 

நலமாக நானில்லை என்று

நன்கு அறிவேன்.

நான் உன்னை இழந்திருப்பேன் !

நேரம் எடுத்து நமது தனிமையில்

நீ உரைத்தால்,

நேசம் உண்டாகும் நமக்குள் !

என் பாடல் உலகை

உதறி விட்டு  உன்னிடம்

ஓடி வருவேன்,

என் காதலி

என்னவள் ஆகி விட்டால் !

 

 

நேரம் நிறைய உள்ள தெனக்கு;

அதைத் தள்ள

உதவ வேண்டும்  நீ !

மீண்டும் என்னவள் ஆவாய் நீ !

இயலும் நமக்கு அதனை

முயன்று முடிக்க !

உன்மீ துள்ள என் காதல்  மிகுந்தது;

பெண்ணே !

என்னை விட்டுச் செல்லாதே !

என்னைப் பிடித்தால்

என் மீது நம்பிக்கை வைத்திடு !

என்னவள் நீயென

ஏற்றுக் கொள்வேன் இனிமேல் !

 மூலம் : பாடகர் பீட்டில்

தமிழாக்கம் : சி. செயபாரதன், கனடா