(கவிஞாயிறு தாராபாரதி 13 & 14 தொடர்ச்சி)

கவிஞாயிறு தாராபாரதி 15 & 16

 

பேரிருளில் தீச்சுடராய்ப் பொலிந்து நன்மை
புரிகின்ற பிறப்பதுவே பெண்மை! உண்மை!
ஈரமிலா இயல்பேற்ற இரும்புத் தன்மை,
இதயத்தில் நல்லெண்ண மின்மை வன்மை!
பாரதனில் மங்கையரின் பங்கு தம்மைப்
பாடலினால் அவர்விரித்தார்! பன்மை மென்மை
சேருமெனில் தோள்புடைக்கச் சேரும் திண்மை!
செந்தமிழில் தெரிவித்தார் தெண்மை! நுண்மை! (15)

வேருக்கு நீருழவன் விடுவ தாலே
விளைவிங்கே வருகிறது! விழலே நாமும்!
பாருக்குள் தெய்வதத்தைப் பாராப் போதும்
பயிரெல்லாம் அவன்சிரிப்பைப் படைத்து நிற்பான்!
ஏருக்கே அவன்கால்கள் என்ற போதும்
இதயத்துள் உலவியவன் எண்ணில் நிற்பான்!
ஊருக்கே உலைவாய்தான்! உழைப்பால் உண்டி
உவந்தளிக்கும் எழுவாயே உழவன் தானே! (16)

சந்தர் சுப்பிரமணியன்

கவிஞாயிறு தாராபாரதி கவிமலர்

(தொடரும்)