பாடுவேன், ஊதுவேன்!

 

பாட்டுப் பாடுவேன்-நான்

பாட்டுப் பாடுவேன்.

பலரும் புகழ, இனிய தமிழில்

பாட்டுப் பாடுவேன்.

கேட்டு மகிழவே-நீங்கள்

கேட்டு மகிழவே,

கிளியின் மொழிபோல் இனிய தமிழில்

கீதம் பாடுவேன்-நான்

கீதம் பாடுவேன்.

 

குழலை ஊதுவேன்-புல்லாங்

குழலை ஊதுவேன்.

கோகு லத்துக் கண்ணன் போலக்

குழலை ஊதுவேன்-நான்

குழலை ஊதுவேன்.

அழகாய் ஊதுவேன்-மிக்க

அழகாய் ஊதுவேன்.

அனைவர் மனமும் மகிழும் வகையில்

அழகாய் ஊதுவேன்-நான்

அழகாய் ஊதுவேன்.

 

குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா :

சிரிக்கும் பூக்கள்