வண்ணப் படம்

 

வண்ணம் தெளித்து வரைகின்றேன்! – நான்

வரிசைப் பூக்கள் வரைகின்றேன்!

கண்கள் கூட வரைகின்றேன்! – அதில்

கருப்பாய் மணிநான் வரைகின்றேன்!

 

காட்டுப் புலிநான் வரைகின்றேன்! – அதன்

கரத்தில் நகங்கள் வரைகின்றேன்!

ஆட்டைப் பார்த்து வரைகின்றேன்! – உடன்

அருகம் புல்லும் வரைகின்றேன்!

 

கோட்டுப் படங்கள் வரைகின்றேன்! – ஒரு

கோவில் கூட வரைகின்றேன்!

வீட்டுச் சுவரில் மாட்டிவிட – நான்

விரைவாய் வரைந்து தருகின்றேன்!

– சந்தர் சுப்பிரமணியன்

புன்னகைப் பூக்கள்  பக்கம் 29