(பூங்கொடி 13 – கவிஞர் முடியரசன்: அடிகளார் அறிவுரை – தொடர்ச்சி)

3. பூங்கா புக்க காதை

பூங்கொடி அழுகை

தேன்மொழிக் கருண்மொழி செப்பிய துயருரை

ஆன்றரு பாலெனும் அருட்பா திளைத்திடும்

பூங்கொடி செவியிற் புகுந்தது ; புகுதலும்

ஓங்கிய பெருவளி உற்றிடு துகிற்கொடி

படபடத் தாலெனப் பகைத்தனள் நெஞ்சம்;  5

மடமை யகற்ற மனங்கொளீஇ நிலத்துக்

கடமை யாற்றுழிக் கைதவ மாங்கரால்

பெற் றோ ரீங்குப் பட்டவெந் துயரால்

உள்ளிற் புண்ணாய் உருகிய குருதி

வெள்ளப் புனலாய் விழிவழி வழிந்தது;   10

கண்ணீ ரிடைவிரி கருவிளை மலரென

எண்ணும் படிக்கிரு கண்களும் இலங்கின :

சுமையாய்த் துயரம் சுமத்திடற் கியலா

அமயத் திருப்போர் அழுதிடல் இயல்பே ;

அழுதிடல் ஏனெனின் அப்பெருந் துயரைக் 15

கழுவும் ஆற்றல் கண்ணிர்க் குளதென

நம்புவர்; அதனுல் நலிவுங் குறைகுவர்;

பூங்கொடி தனக்கோ பொங்கிய துயரம்

நீங்கிற் றிலது நெஞ்சம் விம்மத்

தேம்பித் தேம்பித் தெரிவை அழுதனள்; 20

(தொடரும்)

கவிஞர் முடியரசன், பூங்கொடி