kucha theevu01
சென்னை, தண்டையார்பேட்டை, துறைமுகக் குடியிருப்பில், முன்னாள் துணைத் தலைமையாளர் பாபு செகசீவன்இராம் சிலை திறப்பு விழா  சனவரி 12,2014 அன்று   நடைபெற்றது.

அதில் பங்கேற்ற மத்தியக் கப்பல் துறை அமைச்சர், வாசன், இந்தியச் சிறைகளில் உள்ள, இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும்’ என, இலங்கை அமைச்சர் கூறியிருப்பது  நல்லிணக்கப் பேச்சிற்கு  உகந்ததல்ல என்றும்   கச்சத்தீவை விட்டு கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என்றும்  ஆர்ப்பரிப்புடன் கூறினார்.

ஆனால், மத்திய அரசு சிங்கள மீனவர்களை விடுவித்துள்ளது. கச்சத்தீவிலும் எதிரான நிலைப்பாடுதான் உள்ளது. வாசன் தனிக்கட்சிக்குப் பாதை வகுப்பதற்காக இப்படிப்பேசுகிறாரா உள்ளபடியே உணர்வுடன் பேசுகிறாரா என்பது விரைவில் தெரியவரும்.