arici_rice ku.ramakrittinan_g-ramakrishnan

இன்றியமையா உணவுப் பொருள்களை

இலவசமாக வழங்குக!

– கு.இராமக்கிருட்டிணன் 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் இன்றியமையா உணவுப் பொருள்களை நியாய விலைக் கடைகளில் இலவசமாக வழங்க வேண்டும் என்று மார்க்சியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலர் இராமக்கிருட்டிணன் வலியுறுத்தியுள்ளார்.

  இது தொடர்பாகச் சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

  வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் தங்கள் உடைமைகளை இழந்து தவிக்கின்றனர். இந்தச் சூழலைப் பயன்படுத்தி இன்றியமையாப் பொருள்களின் விலை மிகக் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.

  இந்த நிலையில், இலவசப் பேருந்து பயண வசதி செய்துள்ளதுபோல இன்றியமையாப் பொருள்களை நியாயவிலைக் கடைகள் மூலம் இலவசமாக அளிக்க அரசு முன் வரவேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.