புதிய வீடமைப்புத் திட்டத்தின் அடிக்கல் நாட்டும் விழா

  கந்தப்பளை கோட்லொசு தோட்டத்தில் இயற்கைப் பேரிடரில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்களுக்குப் புதிய வீடுகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா கல்வி அமைச்சர் வே. இராதாகிருட்டிணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண  அவை உறுப்பினர்களான ஆர்.  இராசாராம், சோ.,சீதரன், திருமதி சரசுவதி சிவகுரு,  அறக்கட்டளை அமைப்பின் தலைவர் புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

  ஏறத்தாழ  தனித்தனியே 12  இலட்சஉரூபாய்ச் செலவில் அமைக்கப்படும் 23 வீடுகள் தோட்ட மக்களுக்கு இலவசமாக வழங்கப்படும். இதற்கான நிதி மலைநாட்டுப் புதிய  சிற்றூர்கள், உட்கட்டமைப்பு அமைப்பு வசதிகள் அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களினால் ஒதுக்கப்பட்டதாகும்.

பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam

[படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]

பெயர்-திருஞானம் : name_peyar_paa.thirugnaanam