தமிழியக்கத் தலைமைப் போராளி பேராசிரியர் இலக்குவனாருடன் என் முதல் சந்திப்பு!
05.02.1967
1.மீசைவைத்த இலக்குவனார்
அடடா,அந்த
மேதையின்மேல் எனதுள்ளம்
வைத்த அன்போ,
ஓசைவைத்த கடலினும்
பெரிய தாகும்!
உண்மைவைத்த நெஞ்சுடையார்
தமிழ்மேல் அன்னார்
ஆசைவைத்த தைப்போலே
வைத்த வர்,யார்?
ஆவியையே தமிழ்மேலே
வைத்த செம்மல்!
மாசைவைத்த மனமுடையோர்
அவர்மேல் இங்கே
மாறிமாறி வைத்ததுன்பம்
மலைநி கர்க்கும்!
2.நாடகப்பே ராசிரியர்
என்றன் ஆசான்
நடராச னார்க்கே, யாம்
விழாஎ டுத்தோம்!
பாடுபுகழ் கல்லக்குடி
என்னும் ஊரில்!
பாராட்டிப் பேசுதற்கே
கி.ஆ. பெ.வி.
நாடுபுகழ் இலக்குவனார்
இருவ ரையும்
நல்லதொரு மகிழுந்தில்
அழைத்துச் சென்றேன்!
ஓடுமணிப் பொழுதெனக்குத்
தெரிய வில்லை!
உரையின்பப் படகினிலே
பயணம் செய்தோம்!
3.இலக்குவனார் ...