சுந்தரமூர்த்தி கவிதைகள்
சிலேடை அணி 10
கறிவேப்பிலையும் சிப்பியும்
பயனது உள்வைத்துப், பக்குவம் சேர்த்து,
வியக்கப் பயனளித்து, வீழ்ந்து.-துயரடைந்து
நற்பயன் தந்தளித்து நாணிக் கிடப்பதிலே
பொற்சிப்பி வேப்பிலைக் கீடு.
பொருள்:
1) பயன்களாகக், கறிவேப்பிலை மருத்துவத்தையும், சிப்பி முத்தையும் தன்னுள்ளே வைத்திருக்கின்றன.
2)இவ்விரண்டும் அடைந்தவரைப் பக்குவமாய்ப் பாதுகாக்கின்றன.
3) பிறர் வியக்குமளவிற்கு இவ்விரண்டும் பயனளிக்கின்றன.
4) பாரோர் இவற்றின் பயன்பெற்ற பின்னர் கீழே தூக்கி எறிந்து விடுகின்றனர்.
5) அதனால் போவோர் ...