image-23230

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! – கோ. மன்றவாணன்

திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விரலில் கருப்பு மை வைக்கும்போதே தெரியவில்லையா… நம்நாடு நம்மக்களை நம்பவில்லை என்று! நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்தும் தரும் அட்சயப் பாத்திரம் ஆவோம் என்பவர்கள்… தேர்தலுக்குப் பிறகு எங்கள் திருவோட்டையும் பறித்துக்கொள்வார்கள்! விதிமீறல்களை வேடிக்கை பார்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்ட ஓர் அமைப்புதானோ தேர்தல் ஆணையம். எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் என்பது கனவு சனநாயகம். மந்திரிகள் மட்டுமே மன்னர்கள் ஆவது நவீன சனநாயகம்! ஊழலில் சிதறிய ஒரு சொட்டே வெள்ளமாய்ப் பாயும் விந்தையைப் பார்க்கலாம் தேர்தல் திருவிழாவில் மட்டுமே! பணம் வாங்கி வாக் களித்த நம் மக்களுக்கு அரசியல்வாதிகளைக் குற்றம்சொல்ல அருகதை இல்லையாமே! வாக்குரிமை மட்டுமே கொண்ட எங்கள் மக்களில் சிலர், சாக்கடைப் பன்றிகளோடு சண்டையிட்டு எச்சிலையை வழிக்கிறார்கள். தேர்தல் அகராதியில் இல்லாத ஒருசொல் ‘நேர்மை’ எத்தனை தேர்தல் வந்தாலும் எத்தனை ஆட்சி ...
image-23247

மாற்றத்தை விரும்பும் மக்கள் – திருவாரூர்ச்செல்வன்

மாற்றத்தை விரும்பும் மக்கள்     கடந்த தேர்தல்களைவிட இத்தேர்தலில் மக்கள் மனநிலை மாறியுள்ளது. பொதுவாக இதற்குமுன்பும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர். ஆனால் அவர் இல்லாவிட்டால் இவர், இவர் இல்லாவிட்டால் அவர்  என்பதுபோல், முந்தையத் தேர்தலில் புறக்கணித்தவரை இந்தத் தேர்தலில் புறக்கணித்தும் இந்தத் தேர்தலில் புறக்கணிப்பவரை அடுத்தத் தேர்தலில் வரவேற்றும் மாற்றத்தை வெளி்ப்படுத்தினர். இத்தகைய போக்கே இருமுதன்மைக் ...
image-23278

மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். – வைகோ

''மக்கள் நலக்கூட்டணி, 150 தொகுதிகளில் வெற்றி பெறும். தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும்'' – வைகோ   திருச்சி பஞ்சப்பூரில் தே.மு.தி.க., மக்கள் நலக்கூட்டணி, த.மா.கா., கூட்டணியின் மாற்று அரசியல் வெற்றிக்கூட்டணி மாநாடு நேற்று இரவு நடந்தது. மாநாட்டுக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தலைமை வகித்தார். மாநாட்டில் த.மா.கா., தலைவர் வாசன் பேசியதாவது: தமிழகத்தில், 50 ஆண்டுகளாக ...
image-23226

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் – ஏகாந்தன்

ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் - ஏகாந்தன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அழகாக முகம் காட்டவே ஆடிக்கொண்டு வருகிறாய் உன் வருகையினாலே உவகை மிகக்கொண்டு அப்பாவி மக்கள் வாய்பார்த்து நிற்க அசராது பேசி மகிழ்வார் ஆயிரம் ஆயிரம் வாக்குறுதிகளை அள்ளி வீசி அசத்திடுவார் ஈவுஇரக்கம் எள்ளளவுமின்றி ஏய்த்துப் பிழைப்பார் எத்தியே மகிழ்ந்திடுவார் ஏதுமறியா ஏழைகளை ஆள்வதற்கு அருகதை ஏதுமில்லா அண்டப்புளுகர்கள் அயோக்கிய சிகாமணிகள்!  - ஏகாந்தன், புது தில்லி கவிதைமணி,  தினமணி 17.11.2015
image-23217

ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! – ‘இளவல்’ அரிகரன்

ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா! பொய்களின் ஊர்வலங்கள் அணிவகுக்க, ஐந்தாண்டுக்கொருமுறை வரும் திருவிழா....... அரசியல்வாதிகளின் குழப்பங்களால் அவ்வப்பொது அதற்கு முன்பாகவே வரும் பெருவிழா....... ஒருநாள் மட்டுமே மகுடஞ்சூட்டி ஒற்றைவிரலுக்கு மை பூசி ஆண்டுமுழுமைக்கும் கரிபூசும் அரசியல்வாதிகளின் பொதுவிழா..... கால்பணத்திற்கு ஆசைப்பட்டு வாக்குரிமையை லஞ்சப்பொருளாக்கி கைப்பணம் முழுதுமிழக்கும் வாக்காளர்தம் முட்டாள்நாள் விழா...... இலவசங்களில் ஏமாந்து முழக்கங்களில் மயக்குற்று பரவசத்தில் ஆழ்ந்துபோகும் தேசத்திற்கான ஒருவிழா........ அரங்கேற்றத்திலேயே திருடுபோகும் மேடைகள்..... முதுகுக்குப் பின்புறமே முகத்துதிப் பூச்சூட்டல்கள்..... காதிலே வாக்குறுதிப் பூச்சுற்றி கன்னத்திலே சேற்றுச் சந்தனம்பூசி.... கைகளிலே விலங்குகள் பூட்டி... கால்களுக்குச் சிறைபிடித்தாடுவர். தேர்தல் மக்களுக்கான தேறுதலாகவும், நல்ல ஆட்சியாளர்க்கான மாறுதலாகவும், துன்பமுற்றோர் துயர்தீர்க்கும் ஆறுதலாகவும், நன்மைசேர்க்கும் நாட்டிற்கு வழி கூறுதலாகவும், தேர்தலே .... தேர்தலே...வருகவே! ஆர்வமுடன் ...
image-23199

ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆண்டவர்கள் ஓய்வெடுக்கட்டும்! ஆண்டவன் கட்டளை இது!   தமிழ்நாட்டில் இதுவரை ஆண்ட கட்சிகள்,  நிறைகளும் குறைகளும் கொண்டவையே! இவ்வாறு இருப்பது இயற்கையே! குறிப்பாக இப்பொழுது  தேர்தல் களத்தில் உள்ள செயலலிதாவும் கலைஞர் கருணாநிதியும் பாராட்டத்தக்கப் பணிகளும் ஆற்றி உள்ளனர். ஆனால்,   அதே நேரம், வாயில் தமிழ் முழங்கிக்கொண்டே,  செயலில் தமிழை மறந்தவர்களாக, இருவரும் உள்ளனர். எதை ...
image-23213

மை வைத்துப்பார்க்கும் மக்கள்! – வேங்கடராம்

மை வைத்துப்பார்க்கும் மக்கள்! தேர்தல் வெல்வது யார் என்று தெரிய மை வைத்துப் பார்க்கும் மக்கள்.   *****  காற்று வாக்கில் போயோ நேர் வாக்கில் போயோ குறுக்கு வாக்கில் போயோ வாக்களியுங்கள்! குருட்டு வாக்கில் மட்டும் வேண்டா! *****. வாங்கிய வாக்குகள் கொடுத்த வாக்குகளை மறக்கடிக்கக் கூடாது! ***** நேர்மை வாய்மை கடமை உரிமை வறுமை கொடுமை நன்மை திறமை செம்மை மடமை . . . போக்கச் சில மைகள் . . . ஆக்கச் சில மைகள் . . . ஒழிக்கச் சில மைகள் . . . பன்மைகள் கலந்த ஒரு மை இந்த விரல் மை! ***** கறை ...
image-23210

அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்க! – சச்சிதானந்தம் தெய்வசிகாமணி

அடுத்த நிலைக்கு உயர்த்திச் செல்க! நடித்து நடித்து நாட்டைத் தொடர்ந்து, கெடுத்து அழித்து, உழைக்கும் மக்களை, அடித்துப் பிழைக்க இலவசப் பொருட்களை அடுக்கி வைத்துக், கீழ்நிலை மக்களைக் குடிக்க வைத்துக் குடிக்க வைத்தே, முடக்கி வைக்கும் மடமை கண்டு, வெடித்து எழுந்து அரசியல் வக்கிரம், தடுத்து நிறுத்தித் தமிழன்னை நாட்டை, ஒடுக்கி வருத்தும் கபடத் திருடரை, அடித்துத் துரத்தி, அனைவரும் இணைந்து, அடுத்த நிலைக்கு அன்னை மண்ணை, எடுத்து உயர்த்திச் செல்ல வேண்டுமென, படித்த ...
image-23206

ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்? – தமிழ்சிவா

ஏன் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும்? கல்வித்துறையைச் சீரழித்தது. மலை, மணல் போன்ற இயற்கை வளங்களைப் பேய்த்தனமாகச் சுரண்டியது.       3.சாராய ஆலைகள் நடத்தி மக்களைச் சாகடித்தும் பெண்களைக் கையறுநிலைக்குத் (அபலைகள்) தள்ளியும் அனைவரையும் அறிவுக் குருடர்களாக்கியும் அட்டூழியம் செய்தது. இலவசங்களால் மக்களைச் செயல்படாமல் செய்த குற்றத்திற்காக மாற்றம் வேண்டும்.    5.பொறுப்பற்ற தான்தோன்றித்தனமான செயல்களால் தமிழகத்தையே பாலைவனமாக்கிய ...
image-23204

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை! – இலக்குவனார் திருவள்ளுவன்

கலைஞருக்குக் கேடு விளைவிக்க சிலர் முயற்சி. அவருக்குப் பாதுகாப்பு தேவை!   தனக்குப்பின் குடும்பத்தில் யார் எனக் குடும்பத்தலைவர் என்ற முறையில்  கலைஞர் கருணாநிதியால்  கூற இயலும். ஆனால் கட்சியில் தனக்குப்பின் யார் எனக்  கூற முடியாதே! சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய ஒருவரை அவர் எப்படி அறிவிக்க இயலும்? 'தி.மு.க., ஒன்றும் சங்கர மடம் அல்ல. ...
image-23196

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

பண்பாட்டுச்சீரழிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!   மக்கள் அறிந்தும் அறியாமலும் தவறு செய்பவர்களாக உள்ளனர். அறிந்தே தவறு செய்பவர்கள் அதனால் பெரும்பழி வந்தாலும் திருந்த மாட்டார்கள். ஆனால்,  பேரிழப்பிற்கும் பெருந்துன்பங்களுக்கும் ஆளாகும் பொழுது  தவற்றை உணருவார்கள். கண்கெட்ட சூரிய வணக்கம் மேற்கொண்டு என்ன பயன்? ஆனால், அறியாமல் தவறு செய்பவர்கள் அதனைப் பிறர் சுட்டிக்காட்டும் பொழுது் திருத்திக் கொள்ள ...
image-23184

தேர்தல் தெய்வம் தந்த வரம் வாக்குரிமை – கவிஞர் திருமலைசோமு

  தேர்தல் தெய்வம் தந்த வரம்  வாக்குரிமை என் தேசத்தின்... என் சாலை என் மின்சாரம் என் குடிநீர் என் உணவு என்ற.. எல்லா அடிப்படைத் தேவைகளிலும் இடையூறுகள்.. நேற்றுவரை சீராக சென்ற சாலையில் திடீர் பள்ளம் பொறுத்துக் கொண்டேன் நேற்றுவரை தடையின்றி வந்த குடிநீர், மின்சாரத்திலும் குறைபாடு... பொறுத்துக் கொண்டேன். உண்ணும் உணவுப் பொருட்களின் விலையோ உச்சத்தில் அமைதி காத்தேன்.. இதோ என் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் வரமாய் ஒரு வாசல் திறக்கிறது.... குரல் ஏதும் எழுப்ப முடியாமல் சாமானியனாய் இருக்கும் எனக்கு விரல் அசைவில் எனக்கான மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள தேர்தல் எனும் ...