அழைத்ததால் வந்தேன்! வழியடைத்துத் துரத்துகிறாயே!
நெஞ்சுருகிக் குமுறியதால்தானே வந்தேன்!
பஞ்சம் என்று கதறியதால்தானே வந்தேன்!
கெஞ்சி வேண்டியதாலே இரங்கினேன்,
உனக்காகக் கீழ் இறங்கினேன்!
கொஞ்சமும் நினைவு இல்லையா?
வஞ்சனை செய்கிறாயே...
என்னை அழைத்து விட்டு...!
வறண்ட என் நிலக் காதலி
நான் முத்தமிட ஈர்த்திருப்பாள்....
சுரண்டி அவள் மேனியெல்லாம்
பைஞ்சுதையாலே(சிமெண்டாலே) போர்த்தி வைத்தாய்!
நனைத்து அணைப்பதாலே
உடல் குளிர நலம் கொள்வாள்!
அனைத்தும் மறுதலித்து,
கடல் சேரவே வழி செய்தாய்!
குளம் குட்டை ஏரியென
அங்கங்கே தங்கியிருந்தேன்!
வளம் கொழித்த அத்தனைக்கும்
பங்கம் ...