ஓலமிட் டழுதிடும் உன்மகற் குதவுநீ!
மண்மேல் மட்டும் மழைநீ பெய்தால்
மக்களுக் கெதுவும் சிக்கல் இல்லை!
மனைக்குள் புகுந்தாய், மாடியில் ஏறினாய்,
மயக்கிடும் திருடன் புகுவது போலே!
மகிழுந் தெல்லாம் மறைந்து மூழ்கிட,
மழையே பொழிந்தாய்! மடைகளை உடைத்தாய்,
ஏரியைத் திறந்தாய், ஏழையர் வாட,
மாரியே வெளுத்தாய்! மாந்தர் வாழ்க்கை,
குலையச் செய்தாய்! தலைமேல் ஏறினாய்!
நிலைமையோ மோசம்! தலைநகர் எங்கே?
மின்விசை உணவு,வெண்பால்,குடிநீர்
என்னும் தேவைகள் எங்கே தொலைத்தாய்?
பேருந் தில்லை, சிற்றுந் ...