image-854

வள்ளுவர் வகுத்த அரசியல்

 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் இ. படைமாட்சி  படைமாட்சி - படையினது பெருமை. ஒரு நாட்டாட்சி நன்கு நடைபெறவும், நாட்டில் வாழ்வோர் அச்சமின்றித் தத்தம் கடனை ஆற்றவும் படை மிகமிக இன்றியமையாததாகும். அருள்நெறியில் ஆட்சி புரிவதாகக் கூறும் நாட்டுக்கும் படை இன்றியமையாதது. மக்களுக்குய தீக்குணங்களாம் பொறாமை, செருக்கு, பெருவிருப்பம், பிறரை ஆட்படுத்தும் எண்ணம் முதலியன ஒழியும்வரை படை வேண்டற்பாலதே. ...
image-857

சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர்

பேராசிரியர் வணங்காமுடி, தமிழ்நாடு  அண்ணல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக திசம்பர் 11 அன்று பதவி ஏற்றுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் கும்மம்பட்டியில்  வேளாண் குடும்பத்தில் பிறந்த இவர்  இரு முதுகலைப்பட்டங்கள் , இரண்டு சட்ட முதுகலைப் படிப்பு, இரண்டு முனைவர் பட்டம் ஆகியனவற்றிற்கு உரியவர்.  அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் கடந்த 9 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியதோடு பல்கலைக்கழகத்தின் ...
image-860

சிங்கப்பூரில் தமிழர்களுக்கு எதிரான கொடுமையைத் தடுக்க வேண்டும் – மரு.இராமதாசு

 சிங்கப்பூரில் சிற்றிந்தியா பகுதியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகப்  பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் பின்வருமாறு கூறியுள்ளார்:– சிங்கப்பூரில் இந்தியர்கள் அதிகம் வாழும்  சிற்றிந்தியா (லிட்டில் இந்தியா) பகுதியில் நிகழ்ந்த சாலை  நேர்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த சக்திவேல் குமாரவேல் என்பவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து அங்கு வெடித்த மிகப்பெரிய கலவரம், அடுத்த இரண்டு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. சிற்றிந்தியா பகுதியில் ...
image-862

தமிழ் எழுத்துகளைக் கட்டுப்பாடின்றிக் கண்டபடி எழுதும் போக்கு உள்ளது

- செம்மொழி இராமசாமி சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியில்துறையும் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனமும் இணைந்து நடத்தும் சிறுவர்களுக்கான நன்னெறிக் கதைகள் எழுதும் பணிப்பட்டறை தொடக்கவிழா 09.12.12 அன்று நடைபெற்றது. பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி வரவேற்றார். பல்கலைக்கழக இந்திய மொழிப்புல முதல்வர் மா.கணேசன் தலைமை வகித்துப் பேசினார். தமிழியல்துறை தலைவர் முனைவர் ப.ஞானம் முன்னிலை வகித்துப் ...
image-871

மாமூலனார் பாடல்கள் – 5 – பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) ச. உண்ணா நோன்பு கொண்டு உயிர்விட்டான்! இதைக் கேட்ட சான்றோரும் உயிர்விட்டனர்! என் மகளைப் பிரிந்த யானோ? - தாய் கரிகால்வளவன் தமிழ் நாட்டில் சோழநாட்டை ஆண்டபேர் அரசன்; ஆற்றல் மிக்கவன்; படைகள் நிறைந்தவன்; கடலிலும் நிலத்திலும் பல போர்கள் புரிந்து வெற்றி பெற்றவன். பெருஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்ட பேர் அரசன்; இவனும் எல்லா வகையிலும் சிறந்து விளங்கினான். ...
image-866

தங்கநங்கை அம்ரிதாவிற்குப் பாராட்டுகள்!

அண்ணா பல்கலைக்கழகத்தின் அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில்  நெசவுத்தொழில்நுட்ப இளம்பொறியியலில் (B.Tech - Textile Technoloy) செல்வி அம்ரிதா முதலிடம் பெற்றுத் தங்கப் பதக்கம் பெற்றார். அண்மையப் பட்டமளிப்பு விழாவில் இவருக்குத் தங்கப்பதக்கம் அணிவிக்கப்பெற்றது. பெற்றோர் திருவாளர்கள் சி.மனோகரன்—கசுதூரி, தமக்கை மரு.சந்தனா, சுற்றத்தினர், ஆசிரியர்கள், நண்பர்களுடன் இணைந்து நிறைநலமும் உயர்புகழும் பெற ‘அகரமுதல இணைய இதழும்’ வாழ்த்துகிறது!
image-848

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 5

(முந்தைய இதழ்த் தொடர்ச்சி) 3.6. விழாக்கள்   குழந்தைப் பிறப்பு, திருமணம், இறப்பு ஆகியன விழாக்கள் நடத்துவதற்கான நிகழ்வுகள் ஆயின.   குழந்தைப் பிறப்பிற்குப் பின் கொண்டாடப்படும் விழா, நெய்யணி முயக்கம் (நூற்பா.147,பொருள்) என அழைக்கப் பட்டது. திருமண நிகழ்ச்சி கரணம் என்று அழைக்கப் பெற்றது. (நூற்பா.142,பொருள்) பிறந்தநாள், பெருமங்கலம் என அழைக்கப் பெற்றது(நூற்பா.91,பொருள்).  அரசர் முடி சூடிய நாள் ஒவ்வோர் ...
image-844

புதிது புதிதாய் சிந்தனை செய்

                                                                                                  -கல்வியாளர் வெற்றிச்செழியன் புதிது புதிதாய் சிந்தனை செய் - நீ உலகம் புதிதாய் எழுந்திட செய் - நம் உலகம் புதிதாய் எழுந்திட செய். புதிய தென்பது  பழையதன் வளர்ச்சி புவியில் நிகழ்ந்திடும் புதுமறு மலர்ச்சி விதையும் செடியும் இயற்கையின் சுழற்சி வினைவழி மாற்றும் மக்களின் முயற்சி                                                                                                 புதிது தனி ஒரு செயலே மாற்றமென்றில்லை தனி சிறு விசையின்றி மாற்றங்கள் இல்லை முழுவதும் திடுமென மாறு வதில்லை முயற்சிகள் இன்றி, ...
image-817

மானாமதுரை பெண்ணிற்குத் தேசிய விருது

மானாமதுரை: இந்திய அரசின் 'சங்கீத நாடக அகாதமி' சார்பில், 2013ம் ஆண்டிற்கான அகாதமி விருதுக்கு, மானாமதுரை கடம்  உருவாக்குநர் மீனாட்சி தேர்வாகியுள்ளார். நான்கு தலைமுறையாக கடம் உற்பத்தியில் கேசவன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அரசின் இயல், இசை நாடக அகாதமிக்குட்பட்ட, சங்கீத் நாடக அகாடமி சார்பில் இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. நடப்பாண்டில் ...
image-815

கேரளாவால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகாதா?

 - கலைஞர் வினா?  கேரள அரசின் அட்டூழியத்தால் அட்டப்பாடியில் வாழும் தமிழர்கள் விரட்டப்படும் நிலைக்கு வந்துவிட்டமையால், தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இது  தொடர்பில், ''கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களை, சென்னையில் இருந்து வெளியேற்ற வேண்டும் எனத் தமிழக அரசு உத்தரவிட்டால், இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகி விடாதா?'' எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை வருமாறு:  'கேரள மாநிலம், ...
image-810

இனக்கொலைக் குற்றவாளிகள் தப்பவே முடியாது : வைகோ அறிக்கை

“நடந்தது இனப் படுகொலைதான் என செருமனி மக்கள் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal) அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு :-    “இரவுக்குப் பின் வைகறை மலர்வதுபோல், துன்ப இருளில் தவித்த ஈழத் தமிழர்களுக்கு விடியலின் வெளிச்சம் தோன்றுகிறது. இலட்சக் ...
image-803

இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் பொறியாளர் பணியிடம்

மத்திய அரசின் நுகர்வோர் நலன் உணவு-பொது வழங்கல் துறை அமைச்சகத்தின் கீழ்ச் செயல்பட்டு வரும் இந்தியத் தரவரையறு நிறுவனத்தில் (Bureau of Indian Standard) ஒழிவிடமாக உள்ள  'ஆ' நிலை அறிவியலாளர் ('B' Grade Scientists)பணியிடங்களை நிரப்பத் தகுதியானவர்களிடமிருந்து  இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பொறியாளர் மொத்த  ஒழிவிடங்கள்: 115 துறைவாரியான காலியிடங்கள் விவரம்:  இயந்திரவியல் - 31,  மின்னியல் ...