தொல்காப்பிய விளக்கம்

- பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் முன்னுரை நம் இனிய செந்தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்களில் மிகவும் தொன்மை வாய்ந்த ஒன்றாகத்  தொல்காப்பியம் கருதப்படுகின்றது. தொல்காப்பியத்தின் காலம் கி.மு.ஆறாம் நூற்றாண்டிற்கு முற்பட்டதாகும். வடமொழிப் பாணினியின் காலமாம் கி.மு.நான்காம் நூற்றாண்டுக்கும், தென்மொழித் திருவள்ளுவரின் காலமாம் கி.மு.முதல் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்ததாகும் தொல்காப்பியம் என்பதில் எட்டுணையும் ஐயமின்று. வடமொழியாளர் தமிழகத்தில் புகுந்த காலத்திலேயே ...
image-63

இலக்குவனாரின் தொல்காப்பிய ஆய்வு – 1

 வரலாற்று நோக்கு பழந்தமிழகத்தின் வரலாறு உலகிற்கு இன்றும் அறியபடாததாகவே உள்ளது. தமிழ் மக்கள்கூடத் தங்களின் வரலாறு குறித்து அறியாதவர்களாகவே உள்ளனர். இந்திய வரலாற்றில் தமிழக வரலாற்றிற்கு முதன்மை அளிக்கப்பட வில்லை. இந்திய வரலாற்றாளர்கள் பழந்தமிழகம் குறித்து முற்றிலும் அறியாதவர்களாகவே உள்ளனர். அவர்கள் பழந்தமிழக வரலாற்றை உணர்த்தக் கூடிய பொருள்கள் தங்களிடம் இல்லை எனக் கூறலாம். அவர்களுக்குப் பழந்தமிழர் ...

வள்ளுவர் வகுத்த அரசியல்

 - பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் 1. நாட்டு இயல்  அ. நாடு*  நாடு-விரும்பு: மக்கள் விரும்பி வாழுமிடம் நாடு எனப்பட்டதுபோலும். அந்த நாட்டில் வாழ்வோர் தமக்கு வேண்டியவற்றைத் தேடி வருந்தாமல், பிற நாடுகளை எதிர்பார்த்து  ஏங்கியிராமல் மக்களுக்கு வேண்டியன யாவும் பெற்றிருத்தல் வேண்டும். அங்ஙனமின்றிப்பிற நாடுகளை எதிர்பார்த்து வாழும் வகையில் செல்வக் குறைபாடு உடைய நாடு, நாடு ஆகாது 1.     ...

மாமூலனார் பாடல்கள் – 1

- பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் சங்க இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ப் புலவர்கள்  சங்கமாகக் கூடித் தமிழைப்போற்றினர்; ஆராய்ந்தனர்; பாடல்கள் பாடினர்; அப்பாடல்களில் பலவகையானும் மறைந்தன போக, எஞ்சியிருப்பன எட்டுத் தொகையும் பத்துப் பாட்டுமே. எட்டுத்தொகை எட்டுத் தொகைநூல்களைக் கொண்டது. இவை படிப்போர் உளத்தை மகிழ்வித்து, மக்கட்பண்பை வளர்ப்பன; உலக அமைதியை நிலைநாட்டுவதற்கு மிகவும் துணை செய்வன. இவற்றைப் ...

தமிழ் வரிவடிவம் காப்போம்! – 1

 - தொகுநர்: சிவ அன்பு & இ.பு.ஞானப்பிரகாசன்     அறிவியல் முறையில் சிறப்பாக அமைந்தது தமிழ் வரிவடிவம். தமிழ் வரிவடிவம்தான் இந்திய மொழிகளின் வரிவடிவங்களுக்குத் தாய் என்கிறார் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். ஆனால், அவ்வப்பொழுது வரிவடிவச் சிதைப்பாளர்கள் இவ்வரிவடிவத்தைக் குலைப்பதில்  கண்ணும் கருத்துமாக இருந்து தங்கள் சிதைவு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். செம்மொழி மாநாட்டின்பொழுது சில வரிவடிவச்சிதைகள் ...
image-50

வாழ்க தமிழ் பேசுவோர்..

-    வித்யாசாகர் 'வாட்ச் பக்கெட் தேங்க்சு சாரி'யிலிருந்து தொடங்குகிறது தமிழிற்கான நாள்கொலை.. அம்மா அப்பா மாறி ‘மம்மி டாடி’யானது மட்டுமல்ல ‘டிவி ரேடியோ’ கூட வெகுவாய் தமிழைத் தின்றுதான் பசியாறிக்கொண்டுள்ளது; சுடுகாட்டுப் பிணத்தைக் கூட ‘டெட்பாடி’ ஆக்கும் ஆசையை எந்தக் கொள்ளியிளிட்டுக் கொளுத்தினால் என் தமிழனுக்கு தனது தாய்மொழி முழுக்க தமிழாகித் தொலையுமோ... (?) எவனோ எடுத்தெமைப் புதைக்கும் குழிக்குள் தமிழ்தொலைத்து தொலைத்து விழும் மாந்தரை எந்த மொழி மனிதரெனயெண்ணி மீண்டும் மீண்டும் மன்னிக்குமோ? ‘பேன்ட் சூட்டும் ஃபாரின் காரும் பேஸ்புக் பிசாவும்’ ...
image-47

சருகாகிக் கருகும் அரும்புகள்

                                                                                    -   முனைவர். எழில்வேந்தன் உள்ளங்கைக்குள் ஒளிந்திருக்கும் எதிர்காலத்தை மறந்து, இன்றைய உலகம் இரைதேட வைத்ததால் பிச்சைப் பாத்திரம் ஏந்தி நிற்கின்றன பிஞ்சு விரல்கள்.   வயதுக்கு வந்தால் வாசலுக்குச் செல்லவும் தடைசொல்லி பருவம் வந்ததும் உருவம் மறைக்கவும் உடை சொல்லி பெண்ணின் பெருமை பேசிவந்த பெற்ற உறவுகளே வறுமை வந்தால் எசமானர் இல்லங்களுக்கு எடுபிடி வேலைக்கு அனுப்பும்.   வாழ்வாதாரங்களை எல்லாம் வறுமையின் கொடுங்கரங்கள் நொறுக்கிப் போட்டதால் வசதிகளின் தாழ்வாரங்களில் வதைபடும் தளிர்கள்.   நீதியின் குரல்வளை நெறிக்கப் பட்டதால் வீதியில் கிடக்கும் பிரம்மாக்கள் பெற்ற பிள்ளைகள் இவர்கள்.   வண்ணங்களோடு வளையவரும் வசந்தக் கனவுகளை இமைகளில் தேக்கியிருந்தாலும் இவர்களின் ...
image-39

இதழ்களின் நிலை என்ன?

இன்று வெளிவரும் பெரும்பாலான இதழ்களின் நிலை என்ன? மக்களிடம் பொறிநுகர் உணர்ச்சிகளைக் கிளர்ந்தெழும்படிச் செய்வதையே குறிக்கோளாக் கொண்டு செயல்படுகின்றன. நல்லறிவு கொடுத்து மக்களைத் திருத்தி நல் வழிப்படுத்தவேண்டிய கடமை இதழ்களுக்குண்டு. அக்கடமையைப் பலவும் மறந்து விடுகின்றன. நாட்டில் பெரும்பாலான மக்கள் வளர்ச்சியற்ற நிலையிலேயேயிருந்து வருகிறார்கள். ஆகவே, அவர்களின் நிலைக்கு இறங்கிச் சென்று தங்களின் அறிவை விற்றால்தான் ...

நாணுத்தரும்

-       முனைவர் ஔவை நடராசன்   ஒரு மொழி வருவதனால் பிறிதொரு மொழி கெடும் என்பார் கூற்றினைச் சிலர் எள்ளி நகையாடுகின்றனர். தமிழ்மொழியோடு வடசொற்கள் கலந்தமையாலேயே மலையாளம், கன்னடம்  முதலான மொழிகள்  தோன்றின என்பது மொழி நூலாரின் முடிபு. இன்றும் சிலர் ஆங்கிலச்  சொற்களையும் பிற மொழிச் சொற்களையும் தமிழ் உரையாடலில் இழைய விடுதலால் இனிய தமிழ்ச் சொற்கள் ...
image-35

மீனியல் (Icthyology)

-       பேரா.முனைவர்  இலக்குவனார் மறைமலை 'பெரிதே உலகம் பேணுநர் பலரே' என்று கூறிச் செலினும், இந்நிலப்பரப்பு மும்மடங்கு நீரால் சூழப்பட்டது என்று அறிந்தமையின் ''ஆழிசூழ் உலகம்'' என அறைந்து சென்றனர் நம் முன்னோர். நீர்ப்பரப்பு போக எஞ்சியுள்ள நிலம் 1/4 பங்கே என்பதாலும் அவ்வெஞ்சியுள்ள பரப்பும் வற்றாத ஆறுகள், ஏரிகள், குளங்கள்,  பெரும் வாய்க்கால்கள் போன்றவற்றால் நிரப்பப்படுவதனாலும், ...
image-33

காப்பாற்றுங்கள்……….!

- களப்பாள் குமரன்              எங்கே தமிழ்……. எங்கே தமிழ்…..? கல்விக்கூடத்தில் தமிழ் உண்டா… கடைத்தெருவில் தமிழ் உண்டா….? ஆலயத்தில் தமிழ் உண்டா….? ஆட்சியில் தமிழ் உண்டா தொலைக்காட்சியில் தமிழ் உண்டா…. திரைப்படத்தில் தமிழ் உண்டா….. தமிழ்நாட்டில் தான் தமிழ் உண்டா….எங்கே தமிழ்… தமிழ் எங்கே….? தமிழ் நாட்டில் தமிழ்வாழ, நூறுபேர் சாகும்வரை. உண்ணா நோன்புப் போராட்டம். முதலமைச்சர், தலைமைச் செயலாளரை ...