image-3943

எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! – ஆதிரை

  முனகல்களோடு புலர்ந்து கொண்டிருந்த பொழுதை மூர்ச்சையாக்கி புதைத்த அந்த நாள் பால் குடிப்பதற்காக, சடலத்தின் உடலை உறிஞ்சிய பச்சை மண்ணின் வறண்ட அதரங்கள் கனவுகளைச் சுமந்த பாவாடை மலர்களின் நீலம் பாய்ந்த நயனங்கள் வெட்டிய நெஞ்சின் முட்டிய உறுதியின் அடையாளமாய் கருகிய மீசைகள் சுருங்கிய தோலும் சுருங்காத கனவும் தேக்கிய  இதயங்கள் எத்தனை இழவுகள்! எத்தனை இழப்புகள்! மரணம் அடுக்கி மாளிகை கரசேவக இனவெறிப் பேய்கள் குருட்டு மொழியின் கதறல்களுக்கு இன்னும் வெளிச்சமிடாத பச்சைத் துரோகங்கள் மே 18 சிந்திய செந்துளிகள் அமைதியடையும் நேரம் எது? இனத் துரோகிகள் ஒழிவதெப்போது? தனி ...
image-3966

தேர்தல் – நினைத்தனவும் நிகழ்ந்தனவும் – இலக்குவனார் திருவள்ளுவன்

  அகரமுதல இதழின் சித்திரை 7, 2045 / ஏப்பிரல் 20, 2014 நாளிட்ட இதழுரையில் 'வாக்கு யாருக்கு?' என்னும் தலைப்பில்  தமிழ் நேயர்களின் எண்ணங்களை எதிரொலித்திருந்தோம். தேர்தல் முடிவு வந்துவிட்டது. 16ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர். நம் எண்ணங்களின் சுருக்கத்தையும் அவை நிறைவேறியுள்ளனவா என்பதையும் பார்ப்போம். 1.) காங்கிரசுக் கட்சி இந்தியா, முழுவதும் விரட்டி யடிக்கப்பட ...
image-3936

சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம்- ஐம்பெரு விழா

தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரு விழா! தொண்டை மண்டல வேளாளர்களின் சார்பு அமைப்பான சேக்கிழார் கல்வி பண்பாட்டுக் கழகம் நடத்தும் ஐம்பெரும் விழா, சென்னை புரசைவாக்கத்தில் வெள்ளாளர் தெருவில் அமைந்துள்ள தொண்டை மண்டல வேளாளர்களின் சங்கத்தில் வரும்  சூன் 2 ஆம் நாளன்று  காலை 9 மணிக்குத் ...
image-3930

வெள்ளாளர் கல்வி விழா!

கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை நடத்தும் மாபெரும் வெள்ளாளர் கல்வி விழா! 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பொறியியல் கல்லூரியில் 'தங்க விருது' பெற்றவர்கள், அரசு/தனியார் பள்ளிகள/தொழில் நுட்பக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கும் விழா எனக் கல்வி சார்ந்த அனைத்தையும் உள்ளடக்கி மாபெரும் 'வெள்ளாளர் கல்வி விழா', கன்னியாகுமரி வெள்ளாளர் பேரவை ...
image-3889

வளைகுடா வானம்பாடியின் சித்திரைக் கூட்டம்

குவைத்து வளைகுடா வானம்பாடியின் திங்கள் கூட்டம்,  அன்னையர்  நாள் சிறப்பு நிகழ்வாக சித்திரை 27, தி.பி.2045 10-05-2014 அன்று காலை 10 மணிக்கு,  பஃகாகில் சரவணபவன் உணவகத்தில் மிகச் சிறப்பாக நடந்தது. வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. செல்வி அனுசுரேசு திருக்குறள் கதை சொல்ல, கூட்டத்திற்கு,  பொறியாளர் நடராசன், பொறியாளர்  முனைவர் பால் மனுவேல், பொறியாளர் ...
image-3868

மாமூலனார் பாடல்கள் – 19 : சி.இலக்குவனார்

(சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி) ககூ. “நம்மிற்சிறந்தோர் இம்மை யுலகத்து இல்” (பிரிவின்கண் வேறுபட்ட தலைவியும் தோழியும்) – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவி: தோழி! அவர் அன்று கூறிய உரைகள் நினைவில் இருக்கின்றனவா? தோழி: ஆம் அம்ம! ஒரு தடவையல்ல; பல தடவை கூறியதாகக் கூறினீர்களே! அவ்வுரைகள்தாமே! தலைவி: ஆம், “நம்மின் சிறந்தோர் ...
image-3860

நரேந்திரரே! வியவற்க உம்மை! நயவற்க எம் பகையை!

  மக்கள் தொகை அடிப்படையில் மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட பெரிய நாடு இந்தியா. இதன் அரசியல் தலைமையைக் கைப்பற்றுவது என்பது மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் உரியதுதான்.   அந்தவகையில் நரேந்திரர் தலைமையாளர் பொறுப்பேற்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதில் வியப்பில்லை. ஆனால், தன் வலிமையைச் சிறப்பாக எண்ணி மகிழ்ச்சிக் கடலில் திளைப்பது இடையிலேயே ஆட்சி கவிழவும் வாய்ப்பாகலாம். அவருக்கு இரு முகம் ...
image-3885

அசோகமித்திரனை வாசித்தல் – கருத்தரங்கம்

 சனி - வைகாசி 24, 2045 /07 சூன் 2014  சீனிவாச சாத்திரி அரங்கம் (காமதேனு திரையரங்கம் எதிரில்) மயிலாப்பூர் சென்னை - 600 004 அமர்வு ஒன்று - 10.00 - 12.30 அசோகமித்திரன் புனைவுலகின் சில பரிமாணங்கள் அசோகமித்திரன் கதைகளில்  திரை உலகம் - அம்சன் குமார் அசோகமித்திரன் கதையுலகில் பெற்றோர்களும் பிள்ளைகளும் - கல்யாண இராமன் இலக்கிய நயம் பாராட்டும் மரபில் அசோகமித்திரன் கதைகள் ...
image-3863

பூங்கோதை – 2 : வித்துவான் மு. இராமகிருட்டினன் கலை.மு.,ஆசி.இ.,

 தொடர்கதை (சித்திரை 28, 2045 / 11 மே 2014 இதழின் தொடர்ச்சி)     சிவக்கொழுந்து தம் தங்கை மகளுக்குத் தம் தாயாரின் பெயரையே இட்டு அவளைப் பூங்கோதை என அன்புடன் அழைத்து வந்தார். செங்மலத்தின் கொடுமை ஒருபுறம் இருந்தாலும், சிவக்கொழுந்தினுடைய மாறா அன்பும், காளியம்மையின் பாதுகாப்பும் பூங்கோதைக்குத் துணையாக அமைந்தன. காளியம்மைக்குக் குழந்தையிடம் உண்மையிலேயே நல்லபற்று ...
image-3881

புதின இலக்கிய முகாம்

கதைகள் பேசுவோம் இலக்கிய அமைப்பின் சார்பில் வருகின்ற சூன் 14 (14/06/2014) சனிக்கிழமை,  புதினம் குறித்து விவாதிப்பதற்கான முகாம் ஒன்றினை நடத்த இருக்கிறேன்.   இதில் எழுத்தாளர் பிரபஞ்சன், மொழிபெயர்ப்பாளர் சா.தேவதாசு, ஆகியோர் சிறப்புப் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்கிறார்கள். புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை / டிசுகவரி புக் பேலசு இதனை ஒருங்கிணைப்புச் செய்கிறது. இந்த ஒரு நாள் முகாமில் உலகின் ...
image-3877

வல்லமை வழங்கும் கண்ணதாசன் கட்டுரைப் போட்டி

  அன்பு நண்பர்களே, நம் வல்லமை இதழின் ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, ‘என் பார்வையில் கண்ணதாசன்’ என்ற கட்டுரைப் போட்டியை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். நம் அன்றாட வாழ்வின், சுக, துக்கங்கள் அனைத்திலும்கண்ணதாசன் அவர்களின் பாடல்கள் நம் உடன் பயணிப்பவை; அவரது இலக்கியப் படைப்புகள், தனித்த புகழ் வாய்ந்தவை. அவரது அர்த்தமுள்ள இந்து மதம், இன்றும் விற்பனையில் ...
image-3874

“அகர முதல” கண்டு மலைத்தேன்.

'அகர முதல' விரித்த அருந்தமிழ் கண்டு மலைத்தேன். நூல் விரித்தன்ன‌ மணிநீர் அருவி நுழை படுத்தாங்கு மெல்லிமிழ் தும்பி புன்கால் குடைதர‌ நுண்புலம் அதிர்ந்து விண் விதிர்த்தாங்கு பொதிகை அடுக்கம் பரல் நரல் தமிழின் பொறி கிளர்ந்தன்ன‌ பொற்றமிழ் கண்டு களி மிகுதலுற்றேன். புல்லுள் கல்லுள் புள்ளுள் குன்றுள் அமிழ்தமிழ் ஈண்டு அகவுதல் கேட்டு அக மகிழ்வுற்றேன். வாழ்த்துக்களுடன் (உ)ருத்ரா இ.பரமசிவன்