THAMIZHANNAL01

  சங்க இலக்கியத்திற்குப் பிறிதொரு பெயர் சூட்டு என்று கேட்டால், தயங்காமல், ‘உளவியல் இலக்கியம்’ எனக் குறிப்பிடலாம். அகத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு நூறும், புறத்திணைப் பாடல்கள் நூற்றுக்கு எழுத்தைந்தும் ‘உளவியல்’ பற்றியனவே ஆகும். ஏதேனும் ஒரு மனநிலையை மட்டுமே அல்லது அம்மனநிலை விளைவுக்குரிய சூழலை மட்டுமே அவை பாடுபொருளாய்க் கொண்டவை. எனவே உளவியற் கொள்கைகளையும் பிராய்டு, (இ)யங்கு, என்பாரின், பாலியல், உளவியற் ஆய்வுகளையும் கற்றுணர்ந்தால் சங்க இலக்கியக் கல்விக்கு அது பெரிதும் துணைபுரியும்.

– தமிழ்ச் செம்மல் தமிழண்ணல்: சங்க இலக்கிய ஒப்பீடு: பக்கம். 138