சேரர் – சொல்லும் பொருளும்: மயிலை சீனி.வேங்கடசாமி

சேரர் – சொல்லும் பொருளும்   இராமாயணக் காலத்தில் சீதையைத் தேடிச் சென்ற வானர வீரர்களுக்குச் சுக்கிரீவன் வழித்துறைகளை வகுத்துரைக்கும்போது சோழ, சேர, பாண்டிய நாடுகளைக் குறிப்பிடுகிறான். உதிட்டிரன் இராயசூய வேள்வி வேட்டபோது சோழ, சேர, பாண்டியர் மூவரும் வந்திருந்ததாக வியாசரும் கூறுகிறார்.   கிரேக்கத் தூதரான மெகசுதனீசு என்பார் தமது குறிப்பில் சேரர்களைச் சேரமான்கள் என்றே அழைக்கின்றார்.   திருஞானசம்பந்தரும் தமது பதிகங்களில் சேரர், சேரலர் என்னும் சொற்களைப் பயன்படுத்துகிறார். இவர் வாழ்ந்தது ஏழாம் நூற்றாண்டாகும். இதனை நோக்கும்போது சேரர், சேரலர் என்னும்…

மக்கள்நலக் கூட்டணி வலைத்தள விவரங்கள்

  மக்கள் நலக் கூட்டணிக்காகப் புதிய இணையத்தளமும் குமுக வலைத்தளப் (Social Network) பக்கங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.   மார்ச்சு ௮ (8) செவ்வாய்க்கிழமை முதல் இக்கூட்டணியின் சார்பில் வெளியிடப்படுகின்ற அறிக்கைகள், பொதுக்கூட்ட நிகழ்வுகள், பரப்புரைப் பணிகள் தொடர்பான அனைத்துச் செய்திகளும், படங்கள் – காணுரைகள் (videos) ஆகியவையும் இந்தத் தளங்களில் நாள்தோறும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   பொதுமக்கள், இளைஞர்கள் தங்கள் கருத்துகளை இந்தத் தளங்களில் பகிர்ந்து கொள்ளும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் களத்தில் மக்கள் நலக் கூட்டணிக்காகப் பணியாற்ற விழைகின்ற…

பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடரியில் புதிய ஏற்பாடு!

விரும்பிய இடத்தில் மாறிக் கொள்ளும் வசதி!  தனியாகப் பயணிக்கும் பெண்கள் பாதுகாப்புக்காகத் தொடர்வண்டியில் புதிய ஏற்பாடு!   தொடர்வண்டிப் பயணத்தின்பொழுது சுற்றிலும் ஆண் பயணிகள் இருந்தால், பெண் பயணிகள் வேறு இடத்துக்கு மாறிக் கொள்ளும் வசதியைத் தெற்கு இருப்பூர்தித்துறை (Southern Railway Department) அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகத் தெற்கு இருப்பூர்தித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொடர்வண்டிப் பயணங்களின்பொழுது சில நேரங்களில் தனியாகச் செல்லும் பெண்களுக்கு, சுற்றிலும் ஆண் பயணிகளே இருக்கும் வகையில் இடம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பெண்கள் வசதிக்குறைவாகவும், பாதுகாப்பு இன்றியும் உணர்கின்றனர்….

ஏழு தமிழர் விடுதலை :உச்சநீதிமன்றத்திற்கு உசாவலதிகாரம் இல்லை – நீதிபதி சந்துரு

ஏழு தமிழர் விடுதலைக்கு எதிரான விண்ணப்பத்தை உச்சநீதிமன்றம் உசாவச் (விசாரிக்க) சட்டத்தில் இடமில்லை! – நீதியரசர் சந்துரு நெற்றியடி! இராசீவு கொலையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் விடுதலை விவகாரம் மீண்டும் ஊடக வெளிச்சத்தில்!   இந்த ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வது குறித்துக் கருத்துக் கேட்டு நடுவண் உள்துறைச் செயலருக்குத் தமிழ்நாட்டுத் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மடல் எழுதியிருக்கிறார். கவலைக்கிடமாகக் கிடக்கும் தந்தையைக் கடைசி முறை பார்க்கக் கூட நளினிக்கு ஒப்புதல் மறுத்த செயலலிதா அரசு, அது நடந்த அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இவர்கள் ஏழு…

ஈழ ஏதிலியர் இரவீந்திரன் தற்கொலையால் தமிழகத்திற்குக் கெட்ட பெயர்! – வைகோ வேதனை!

[பொதுக்குறிப்பு : செய்தியைமுந்தித்தரும் ஆவலில் வெவ்வேறு வகையான செய்திகள் ஊடகங்களில் வருகின்றன. இறந்தவர் பெயர் இரவிச்சந்திரன், இரவீந்திரன் என்ற முரண்பாடு;  இறந்தவர் தன் மகன்  பிரவன் இல்லாமைக்கான காணரத்தை விளக்கியதாகவும், அவரே காலத்தாழ்ச்சியாக வந்ததாகவும இருவேறு தகவல்;  முகாம் உள்ள ஊரின் பெயரிலும் முரண்பாடு;  வருவாய்ஆய்வர் பெயர் இராசேந்திரன், துரைப்பாண்டி என்ற முரண்பாடு;   நேரடியான செய்தி எதுவும் வராததால்,ஊடகங்கள் செய்திகளை நன்றியுடன் பகிர்கிறோம்.  – ஆசிரியர்] ஈழ ஏதிலியர் இரவிச்சந்திரன் தற்கொலையால் உலக அளவில் தமிழகத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாக ம.தி.மு.க…

தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்!

தேர்தல் நடத்தை நெறிமீறல் குறித்து முறையீடு அளிக்க  பகிரழைப்பி(வாட்சு-ஆப்) எண்! அறிவித்தது தேர்தல் ஆணையம் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைத் தேர்தலில் நடத்தை நெறிமுறைகளை மீறி நடப்பவர் குறித்து முறையிட பகிரழைப்ப (வாட்சு-ஆப்) எண்களைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்துச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தத் தமிழகத் தேர்தல் ஆணையர் இராசேசு இலக்கானி, “தமிழகத்தில் தேர்தல் நடத்தை நெறிமுறைகள்   செயற்பாட்டில் உள்ளன. மாநிலம் முழுவதிலும் பறக்கும் படையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப் பொறிகளைச் சரி பார்க்கும் பணி 90% முடிந்து விட்டது. சட்டமன்றத்…

அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள்!

அரசு மின் சேவை மையம் மூலம் பாடநூல்கள் பெறும் வசதி அறிமுகம்!   முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு (+2) வரையிலான பாடநூல்களுக்கு மாணவர்கள் அரசு மின் சேவை மையத்தில் பணம் செலுத்திப் பதிவு செய்தால், வீட்டுக்கே அவை அனுப்பி வைக்கப்படும் எனத் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் அறிவித்துள்ளது.   இது தொடர்பாக அந்தத் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:  “மாணவர்களுக்குத் தேவையான, முதல் வகுப்பு முதல் மேனிலை இறுதி வகுப்பு வரையிலான பாடநூல்களை இணையவழி…

மனித நேயர் ஊடகப்போராளி மேத்தியூ இலீயை ஐ.நா. வெளியேற்றியது!

ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீயை ஐ.நா.வலுக்கட்டாயமாக வெளியேற்றியது!   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து புலம்பெயர் தமிழ்த் தலைமைகள் வரை எல்லா அமைப்புகளும் ‘ஐக்கிய நாடுகள் அவையை நம்பினோர் கைவிடப்படார்’ என மக்களை ஏமாற்றி வருகின்றன. ௨௦௦௯ (2009)-ஆம் ஆண்டு இனப்படுகொலை தொடங்கிய நாளிலிருந்தே இந்த ஏமாற்று வேலை மிகு வேகத்தில் தொடங்கி விட்டது. புலிகளையும் அதன் தலைவர்களையும் மக்களோடு சேர்ந்து வன்னியில் குந்தியிருக்குமாறு இத்தலைமைகள் அறிவுரை வழங்கின. அங்கு அமெரிக்காவும் ஐக்கிய நாடுகள் அவையும் திடீரெனத் தோன்றிக் காப்பாற்றிவிடும் என்று ஏமாற்றினர்….

299 உரூபாயில் இணைய ஊழியம் – தமிழ்நாடு அரசு தொடக்கம்

299 உரூபாயில் 2 மாப்பேரெண்மம் (கிகாபைட்டுக்கு) இணைய ஊழியம் தமிழ்நாடு அரசு தொடக்கம்   தமிழ்நாடு அரசு வடக்காட்சி வாயிலாக இல்லந்தோறும் இணையம் திட்டம், மாணவர்களுக்கான திரள்கணினி- இணையப் பதிவேற்ற சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் செயலலிதா   அரசுக் கம்பிவடத் தொலைக்காட்சி (cable t.v.) நிறுவனம் மூலம் குறைந்த கட்டணத்தில் இணையச் சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் செயலலிதா தொடங்கி வைத்தார்.   மாநிலம் முழுவதும் மீவேக அகண்ட அலைவரிசைச் சேவைகள் (Broadband Services)  மற்றும் இதர இணையச் சேவைகள் (Internet…

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை – வைகோ

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை (Budget) ! – வைகோ  “நடுவண் அரசின் பொது நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடுவண் நிதி அமைச்சர் அருண் செத்லி அளித்துள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதாம் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளியல் (economical) வளர்ச்சி 8.6 விழுக்காடு(%) இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது…

சான்சன் & சான்சன் உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!

சான்சன் & சான்சன் (Johnson & Johnson) நிறுவனப் பொருளால் புற்றுநோய் தாக்கிப் பெண் உயிரிழப்பு! உரூ. 493 கோடி இழப்பீடு அளிக்க மிசோரி நீதிமன்றம் தீர்ப்பு!   அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் வாழ்ந்த சாக்குலின் பாக்சு (Jacqueline Fox) என்ற பெண் 35 ஆண்டுக் காலமாக சான்சன் சான்சன் நிறுவனத்தின் முகமாவு (Talcum powder) முதலான பொருட்களைப் பயன்படுத்தி வந்துள்ளார்.   அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகக் கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு அக்தோபர் மாதம் தனது 62ஆவது அகவையில்…

ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!

இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்ட ஒன்பது மாவட்ட மீனவர்கள் கைது!   தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதைக் கண்டித்தும், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைத்துள்ள விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும், அமைதியாக மீன் பிடிக்க உறுதி அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தியும் நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், இராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை பிப்ரவரி 29, 2016…

1 9 10 11 14