உண்ணாநோன்பைக் கைவிட்ட உதயகலா!

தனிமைச் சிறையில் இருந்து விடுவிப்பு! ஈழத் தமிழப் பெண் உதயகலா உண்ணாநிலையைக் கைவிட்டார்!   தனிமைச் சிறையில் இருந்து தன்னைக் காவல்துறையினர் விடுவித்ததை அடுத்து, ஈழத் தமிழ்ப் பெண் உதயகலா உண்ணாநிலைப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளார்.   இலங்கை வவுனியா பகுதியிலிருந்து தயாபரராசு என்பவர் கடந்த 2014-ஆம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் ஏதிலியராக தனுசுக்கோடிக்கு வந்தார். தயாபரராசு, அவர் மனைவி உதயகலா, மூன்று குழந்தைகள் ஆகியோரிடம் உசாவிய (விசாரணை நடத்திய) காவல்துறையினர், தயாபரராசு மீது கடவுச்சீட்டுச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில்…

பௌத்தத்தை முறியடிக்கவே பிராமணர்கள் மரக்கறி உண்டனர்

பௌத்தத்தை முறியடிக்கவே பிராமணர்கள் மரக்கறி உண்டனர்     அக்காலத்தில் பிராமணர்கள் வீட்டிற்கு யாரேனும் விருந்தினர்கள் வந்தால், அவர்களைப் பெருமைப்படுத்த ஆ(பசு)வைக் கொன்று அவருக்கு விருந்தளிக்க வேண்டியிருந்தது. இதனால் அந்த விருந்தாளி ‘கோக்னா’ என்று அழைக்கப்பட்டு, வெறுக்கப்பட்டார். இது போன்றே ஆ வதையைச் செய்பவர்கள் என்று பிராமணர்கள் அனைவரும் வெறுக்கப்பட்டு வந்தனர்.   இத்தகைய இக்கட்டான நிலைமையில், ஒரு வழிபடும் முறையாக வேள்வியை நிறுத்துவதையும், மாட்டு வதைக்கு முற்றுப்புள்ளி வைப்பதையும் தவிர பௌத்தர்களுக்கு எதிராகத் தங்கள் நிலைமையை மேம்படுத்திக் கொள்ளப்  பிராமணர்களுக்கு வேறு வழியில்லை….

சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்? – இரா.பி. சேது(ப்பிள்ளை)

சென்னை திரிசூலம் பகுதியின் உண்மையான பெயர்?   தோப்பு   மரஞ் செடிகள் தொகுப்பாக வளரும் இடம் தோப்பு என்று அழைக்கப்படும். தோப்பின் அடியாகப் பிறந்த ஊர்களும் உண்டு. மந்தித் தோப்பு என்னும் ஊர் நெல்லை நாட்டிலும், மான்தோப்பு இராமநாதபுரத்திலும், நெல்லித் தோப்பு தஞ்சை நாட்டிலும், வௌவால் தோப்பு தென்னார்க்காட்டிலும் விளங்குகின்றன. சுரம் சுரம் என்பது காடு. தொண்டை நாட்டில் உள்ள திருச்சுரம் இப்பொழுது திரிசூலம் என வழங்குகின்றது. அந்நாட்டில் உள்ள மற்றோர் ஊரின் பழம் பெயர் திருவிடைச்சுரம். அது திருவடிசூலம் எனத் திரிந்துவிட்டது….

கடம்பறுத்தல்: மயிலை சீனி.வேங்கடசாமி

கடம்பறுத்தல்: அரபிக் கடலில் பல சிறு தீவுகள் உள்ளன.1 ‘இரு முந்நீர்த் துருத்தி’2 என இது பதிற்றுப்பத்தில் கூறப்பட்டுள்ளது. அங்குக் கடம்ப (கடப்ப) மரத்தைக் காவல் மரமாக உடைய அரசன் ஒருவன் இருந்தான். அவனைக் கடம்பன் என்றே குறிப்பிடலாம்.3 நெடுஞ்சேரலாதன் தன்னிடமிருந்த பெரும்படையைக் கடற்போரில் ஈடுபடுத்தினான்;4 கடம்பனைத் தாக்கினான். நெடுஞ்சேரலாதன் கடம்பனின் படையைக் கொன்று குவித்தான். குருதி ஆறு ஓடிக் கடற்கழிகளைச் செந்நிறமாக்கியது. காவல் மரம் கடம்பு அடியோடு வெட்டி வீழ்த்தப்பட்டது. அதன் அடித் துண்டால் அக்கால வழக்கப்படி நெடுஞ்சேரலாதன் தனக்குப் போர் முரசு…

மேத்தியூ இலீ ஐ.நா-விலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்துக் கூட்டம்!

  ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்த மேத்தியூ இலீ ஐ.நா.-விலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்துக் கண்டனக் கூட்டம்! ஐ.நா-விற்குள் நடக்கும் ஊழல்களையும், முறைகேடுகளையும் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த அகநகர் இதழியம் (Inner city press) என்ற இதழையும் அதன் ஆசிரியரான மேத்தியூ இலீ அவர்களையும் மிகக் கொடுமையாக வெளியேற்றிய ஐ.நா-வைக் கண்டித்துக் கடந்த மாசி 22, 2047 / ௫-௩-௨௦௧௬ (05.03.2016) அன்று மாலை, சென்னை எழும்பூர் இக்சா அரங்கத்தில் கண்டனக் கூட்டத்தை மே பதினேழு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்…

பம்புளி என மருவிய பைம்பொழில் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

பம்புளி என மருவிய பைம்பொழில்     மரங்களும், செடி கொடிகளும் செழித்தோங்கி வளரும் சோலையைப் பொழில் என்னும் அழகிய சொல் குறிப்பதாகும். ஆல மரங்கள் செறிந்து, அழகிய சோலையாக விளங்கிய ஓர் இடத்தைத் திருவாலம் பொழில் என்று தேவாரம் பாடிற்று. ஆலம் பொழிலில் அமர்ந்த பெருமானைத் திருஞானசம்பந்தர் தெள்ளிய பாமாலை அணிந்து போற்றியுள்ளார். இன்னும், மலைவளம் வாய்ந்த திருக்குற்றால மலையின் அடிவாரத்தில் கண்ணினைக் கவரும் தண்ணறுஞ் சோலைகளின் நடுவே, ஓர் அழகிய ஊர் அமைந்திருக்கிறது. அவ்வூரின் இயற்கை நலத்தினைக் கண்டு இன்புற்ற பண்டைத்…

காவும் ஆரியங்காவும் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

 கா என்னும் சொல் சோலையைக் குறிக்கும். அது காவு எனவும் வழங்கும். மேற்குத் தொடர் மலையில் செங்கோட்டைக்கு அருகே ஆரியங்காவு என்னும் ஊர் உள்ளது. ஆரியன் என்பது ஐயனாருக்குரிய பெயர்களில் ஒன்று. ஐயனாரை மலையாள நாட்டார் ஐயப்பன் என்பர். ஆரியங்காவில் ஐயப்பன் வழிபாடு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றது. மேற்குத் தொடர் மலைச்சாரலில் அமைந்த நெடுஞ்சோலையில் ஐயப்பன் கோயில் கொண்டமையால் அவ்வூர் ஆரியங்காவு என்று பெயர் பெற்றதென்பது நன்கு விளங்குவதாகும்.   தொண்டை நாட்டில் திருமாலுக்குரிய திருப்பதிகளுள் ஒன்று திருத்தண்கா எனப்படும். அழகும் குளிர்மையுமுடைய அக்…

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா? – விடுதலை இராசேந்திரன்

சஞ்சய் தத்துக்கு ஒரு நீதி; ஏழு தமிழருக்கு ஒரு நீதியா?   தேர்தல் நாள் அறிவிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்புதான் தமிழக அரசுக்குத் திடீர் ‘அறிவுப்புலர்ச்சி’ வந்தது. இராசீவு கொலை வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் ஏழு தமிழர்களை விடுவிப்பது குறித்து மீண்டும் மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டது. நவம்பர் 2ஆம் நாள் உச்சநீதிமன்றம் இது குறித்துத் தீர்ப்பளித்த பிறகு, மூன்று மாதக் காலம் உறங்கிக் கிடந்தது தமிழக அரசு. எதிர்பார்த்தபடியே, அடுத்த நாளே நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர், பேராயக் (காங்கிரசு) கட்சியைச்…

திருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு!

திருப்பூர் அருகே பத்தாம் நூற்றாண்டு நந்திச் சிற்பம் கண்டுபிடிப்பு!  திருப்பூர் அருகே 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, தமிழ் எழுத்துகளுடன் கூடிய நந்திச் சிற்பம் ஒன்றைத் தொல்லியல் – வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.   திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலையில் உள்ள படியூர் அருகே சின்னாரிபட்டி ஊரிலுள்ள கம்பத்தீசுவரர் கோயிலில், திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் – வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் க.பொன்னுசாமி, ச.இரஞ்சித்து, இரா.செந்தில்குமார், பொறியாளர் சு.இரவிக்குமார் ஆகியோர் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில், 10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த…

காடு என்னும் பெயருடைய பல ஊர்கள் – இரா.பி.சேது(ப்பிள்ளை)

   காடு என்னும் பெயருடைய ஊர்கள் தமிழ் நாட்டில் பல உள்ளன. தொண்டை நாட்டில் பழையனூருக்கு அணித்தாக உள்ளது திருவாலங்காடு. பொன்னேரிக்கருகே உள்ளது பழவேற்காடு. கருவேல மரங்கள் நிறைந்திருந்த பழமையான காடு பழவேற்காடு எனப்பட்டது போலும். அவ்வூரில் வந்து குடியேறிய ஐரோப்பியர் அதனைப் புலிக் காடாக்கி விட்டனர். சோழ நாட்டில் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் ஏனைய தமிழரசர் இருவருக்கும் பெரும் போர் நிகழக் கண்ட காடு தலையாலங்காடாகும். இன்னும், சேலத்தினருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது. காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால்…

வங்கி விவரம் கேட்டுப் பணம் திருடும் மோசடி பெருகிவருகின்றது!

வங்கி விவரம் கேட்டுப் பணத்திருட்டில் ஈடுபடுவோர் பெருகிவருகின்றனர்.   கோவை மாநகரில் பொதுமக்களின் வங்கிக் கணக்கில் இருந்து புது முறையில் பணம் திருடப்பட்டதாகக் கடந்த மூன்று மாதங்களில் 62 முறையீடுகள் (புகார்கள்) வந்துள்ளன. இது தொடர்பாகக் குற்றவாளிகளின் எண்களை வெளியிட்டு மின்வெளிக் குற்றப்பிரிவுக் (Cyber Crime) காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.   வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்களின் கைப்பேசிக்கு, அவர்களுடைய வங்கியின் மேலாளர் பேசுவதாக அழைப்பு விடுக்கப்படுகிறது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவரின் பண அட்டை (ATM) விவரம், கடன் அட்டை (credit card) விவரம், பிறந்த நாள்…

குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் – பெயர்க் காரணம்: இரா.பி.சேது(ப்பிள்ளை)

குன்றின் பெயர் கொண்ட தமிழ்நாட்டு ஊர்கள் – பெயர்க் காரணம்  குன்றின் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டிற் சில உண்டு. பாண்டி நாட்டுத் திருப்பரங்குன்றமும், தொண்டை நாட்டுத் திருக்கழுக்குன்றமும் பாடல் பெற்ற மலைப் பதிகளாகும். ஆர்க்காட்டு நாட்டில் குன்றம் என்பது குணம் என மருவி வழங்கும். நெற்குன்றம், நெடுங்குன்றம், பூங்குன்றம் என்னும் பெயர்கள் முறையே நெற்குணம், நெடுங்குணம், பூங்குணம் என மருவி உள்ளன. குன்றை அடுத்துள்ள ஊர் குன்றூர் என்றும், குன்றத்தூர் என்றும், குன்றக்குடி என்றும் பெயர் பெறும். அப்பெயர்களிலுள்ள குன்றம் பெரும்பாலும் குன்னம்…