புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.11-15

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 11. உழுந்தொ ழிற்குரித் தாகவே ஒழிந்த யாவு முஞற்றலான் பழந்த மிழ்வகுப் பாரெலாம் உழுந்தொ ழிற்கொ ளுழவரே. 12. தாளி னாற்பொருள் தருவதை வேளெ னப்பொருள் விள்ளுவர் நாளு மேதொழில் நன்குசெய் தாளு வோர்கள்வே ளாளரே. 13. இத்தொ ழிலிவர்க் கின்றெனா எத்தொ ழிலுமெ வாருஞ்செய் தத்தொ ழிற்குரி யார்களாய் ஒத்து வாழ்ந்த ரொருங்கரோ. 14. மன்ன ராகலாம் பின்னரும் மன்னர் பின்னரின் வாழலாம்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.3.6-10

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம் 3. மக்கட் படலம் 6. மேழி யானில மேவுயிர் சூழ வுண்டு தொகுபசி வீழ வுண்டி விளைக்குவோர் ஆழி மொய்ம்பின்வே ளாளரே.   7. களவு முற்றிய கற்பினர் அளவ றிந்தற மாற்றிட உளம றிந்தவர்க் கோதுவோர் பளகி லாத்தமிழ்ப் பார்ப்பனர்.    8.மற்று முள்ள வகுப்பெலாம் உற்ற வாழ்வுக் குறுதுணை யிற்றொழிலினி யன்றதாற் பெற்ற தொழிற் பேரரோ.   9. முதலில் வெம்பசி மூளவே…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-81 / 1.3.1-5

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80 தொடர்ச்சி) 81. ஐம்பெருங் கண்டமாவின் றமைதரு முலகில் வாழும் வம்பலர் பயில்வண் டன்ன மக்களெல் லோர்க்கு முன்னர்த் தம்பெயர் விளங்கப் போந்த தாயகம் இதுவே யென்றால் இம்பரில் இதனுக் கொன்றீ டிதுவலால் பிறிதொன் றுண்டோ ? 3. மக்கட் படலம் வேறு அத்த மிழகத் தாய்தரும் முத்த மிழ்த்துறை முற்றிய மெய்த்த மிழ்ப்புல வேந்தரைப் புத்து ணர்வுறப் போற்றுவாம். 2. முன் னு மில்லற முற்றியே தன்ன லங்கள் தவிர்த்துமே இன்ன லஞ்செய் திசைபெறும் அன்ன ரே தமி…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.76-80

(புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75 தொடர்ச்சி) 76. முல்லையைக் குறிஞ்சி சார முல்லைமற் றதனைச் சார எல்லியுண் டாக்கு பாலை யிருமையுஞ் சேரச் சார மல்லலஞ் செறுவை நெய்தல் மருவிட மருதந் தன்னைப் புல்லிடக் கழியை யைந்தும் புணரியாப் புறுமாங் காங்கே. 77. அருந்தமி ழகத்தெப் பாலு மமைந்தநா னிலத்தாங் காங்கே பொருந்திய நடுவண் வானம் புகுதரு மாடக் கோயில் இருந்தனர் தலைவ ரானா ரினத்தொழில் மக்க ளெல்லாம் திருந்திய சிற்றா ராங்கண் திகழ்ந்தனர் புறஞ்சூழ்ந் தம்மா. 78. பேரர சதன்கீழ் மூன்று…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.71-75

(இராவண காவியம்: 1.2.66-70 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   71.குன்றுறை கோட்டி யானை குறுகியே பழனந் தன்னைத் தின் றுசெங் கரும்பைக் கையிற் செழுங்கிளைக் காகக்கொண்டு சென்றிடும் வழியில் வேங்கை செருக்கவக் கரும்பாற்றாக்கி வென் றதை யெயினர் கொள்ள வீசிவே தண்டஞ்சாரும். 72.புல்லிய சுடுவெம் பாலைப் புறாவயல் மருதம் புக்கு நெல்லயின் றேகும் போது நீர்க்கொடி பலவைக் கவ்விச் செல்லவே யிளம்பார்ப் பென்று செருச்செய்தச் சுளைப்பலாவை முல்லையாய்ச் சிறுவர்க் காக்கி முனைப்பொடு பறந்துசெல்லும். அஞ்சிறைப் பொன்காற்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.66-70

(இராவண காவியம்: 1.2.61-65 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   வேறு பசிபட வொருவன் வாடப் பார்த்தினி திருக்குங் கீழ்மை முசிபட வொழுகுந் தூய முறையினை யறிவார் போல வசிபட முதுநீர் புக்கு மலையெனத் துவரை நன்னீர் கசிபட வொளிமுத் தோடு கரையினிற் குவிப்பா ரம்மா.   பாணியுஞ் சீருந் தூக்கும் பண்ணொடு பொருந்தச்செங்கை ஆணியுந் திவவுங் கூட் டி யமைத்தயாழ் நரம்பைச் சேர மாணிழைப் பரத்திபாட மகன்றில்கேட் டுவக்கும்பாக்கம் காணிய கலமுள் ளோர்க்குக் கலங்கரை விளக்கங்காட்டும்….

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.61-65

(இராவண காவியம்: 1.2.56-60 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம்   மருதம் தொடர்ச்சி   மரைமலர்க் குளத்தி லாடும் மயிர்த்தலைச் சிறுவர் நீண்ட பொருகரிக் குருத்த ளந்து பொம்மெனக் களிப்பரோர்பால், குரைகழற் சிறுவர் போரிற் குலுங்கியே தெங்கின்காயைப் புரைதயப் பறித்துக் காஞ்சிப் புனை நிழலருந்து வாரே. 62.மழுக்குதா ராக்குஞ் சுக்கு வாத்திளங் குஞ்சு நீத்தம் பழக்கவக் காட்சி யைத்தாய் பார்த்துள் மகிழுமோர்பால்; வழக்குறு மக்க ளுண்டு வழிச்செல விளநீர்க் காயைக் கொழுக்கவுண் டலத்துப் போன குரக்கினம் பறித்துப்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.56-60

(இராவண காவியம்: 1.2.51-55 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் மருதம். வேறு 56.கல்லிடைப் பிறந்த யாறுங் கரைபொரு குளனுந் தோயும், முல்லையம் புறவிற் றோன்று முருகுகான் யாறு பாயும், நெல்லினைக் கரும்பு காக்கும், நீரினைக் கால்வாய் தேக்கும், மல்லலஞ் செருவிற் காஞ்சி வஞ்சியு மருதம் பூக்கும். 57.சேற்றினை யுழுவார் சேற்றிற் செந்நெலை விதைப்பார் செந்நெல் நாற்றினை நடுவார் நாற்றின் நடுக்களை களைவார் நன்னெல் தூற்றினை யறுப்பார் தூற்றின் சுமையினைச் சுமப்பார் சுற்றும் ஏற்றினை யுகைப்பா ரேற்றி  னிகல்வலி…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.51-55

(இராவண காவியம்: 1.2.46-50 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் பாலை   51.கடிக்கமழ் மராமலர்க் கண்ணி யஞ்சிறார் படிக்குற வெருத்துக்கோ டன்ன பாலைக்காய் வெடிக்கவிட் டாடிட விரும்பிக் கோலினால் அடிக்குமோ சையிற்பருந் தஞ்சி யோடுமே. 52.பொருந்திய நண்பகற் போதிற் காளையின் திருந்திழைக் கன்னியுஞ் செல்லக் கண்டுமே இருந்துமே யெம்மனை யின்று நாளை நீர் விருந்துண்டு சென்மென வேண்டிக் கொள்வரே. தோட்டுணை யாகவே சுரிமென் கூந்தலைக் கூட்டியே செல்பவன் குற்ற மற்றவன் ஆட்டிநீ ‘பிரிக்கலை’ யென் றவ் வன்னையை…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.46-50

(இராவண காவியம்: 1.2.41-45 தொடர்ச்சி)   இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை & பாலை கொன்றையம் புறவிடைக் கொடியின் மின் னரி வான் குன் றுறை யிளையகார் குறுகி மாலையிற் சென்றவர் வரவெதி நள்ளிச் செவ்வியர் முன் றிலி லிறைகொள் முல்லை யோங்குமால்,   பாலை எல்லிய முது வெயி லெறிப்படி நல்வள முல்லையுங் குறிஞ்சியும் முறைமை தப்பியே நல்லியல் பிழந்தற நலிவு செய்திடும் பல்லவங் கருகுவெம் பாலை காணுவாம். வற்றிய விருப்பையும் வதங்கு மோமையும் துற்றிய…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.41-45

(இராவண காவியம்: 1.2.36-40தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் முல்லை கொல்லியந் தேனெனுங் குதலை வாய்த்தமிழ்ச் சொல்லியர் முத்தொடு துனிவு கொண் டொளிர் பல்லென மலர்ந்தவர் பணியத் தோள்பெறும் முல்லையம் புறவடர் முல்லை காணுவாம். பூவையுங் குயில்களும் பொலங்கை வண்டரும் பாவிசை பாடமுப் பழமுந் தேனுந்தந் தேவிசை பெறுங்கடற் றிடையர் முக்குழல் ஆவின மொருங்குற வருக ணைக்குமால். மக்களுக் குணவிட வளைக்கை யாய்ச்சியர் கக்கமுக் கிடத்தயிர் கடையு மோசைகேட் டக்கறைக் கொண்டு பார்ப் பணைக்கும் பேடையைக் கொக்கரக் கோவெனக்…

புலவர் குழந்தையின் இராவண காவியம்: 1.2.36-40

(இராவண காவியம்: 1.2.31-35 தொடர்ச்சி) இராவண காவியம் 1. தமிழகக் காண்டம்  2. தமிழகப் படலம் குறிஞ்சி 36. அடுப்பிடு சாந்தமோ டகிலின் நாற்றமும் துடுப்பிடு மைவனச் சோற்றி னாற்றமும் மடுப்படு காந்தளின் மணமுந் தோய்தலாற் கடைப்படு பொருளெலாங் கமழுங் குன்றமே. 37. தண்டமி ழகமெனுந் தாயின் மங்கலங் கொண்டணி விழவயர் குறிச்சி முன்றிலிற் றொண்டக முழங்கிடத் தோலின் யாக்கையர் கண்டெனு மொழிச்சியர் களிப்ப வாடுவர். 38. சந்தன முன்றிலிற் றங்கை பாவையை மந்திகை செய்துள மகிழச் செய்யுமால்; குந்தியே கடுவனுங் குழந்தை முன்மட…