கவிஞர் வேணு குணசேகரனின் திருத்தமிழ்ப்பாவை:பாசுரங்கள் 3 & 4

(திருத்தமிழ்ப்பாவை – பாசுரங்கள் 1 & 2 :தொடர்ச்சி)   திருத்தமிழ்ப்பாவை பாசுரங்கள் 3&4    மூன்றாம் பாசுரம் தமிழின் உடலும் உயிரும் ஓங்கு பெருஞ்சக்தி உள்ளுறை அங்கமெனத் தாங்கும் இருநூற்று நான்பத்தின் ஏழெழுத்து; தூங்காப் புலன்மிக்கார் சூத்திரமாய்ச் செய்தவுயிர்; மூங்கில் குழலோசை மேவுகிற செம்மொழியாள்! நீங்கா இயற்கைபோல் நீணிலத்தில் வாழும்தாய்! ஈங்கவள் நல்லருளை ஏற்பதற்கு வான்மீது வீங்கொளியன் ஏகுமுன், நாம்விரைவோம்; ஆங்காலம் தூங்காது வம்மின் தொடியணிந்தே, எம்பாவாய்! நான்காம் பாசுரம் சங்கம் வளர்த்த மொழி வில்லார், புலியார், கயலார் முடிவேந்தர் வெல்வார் செருக்களத்து…

உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை – மறைமலை இலக்குவனார் அணிந்துரை

உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை     – அணிந்துரை வெல்க தமிழ்!   பாவலர் வேணு.குணசேகரன் அவர்கள் இயற்றிய ‘திருத்தமிழ்ப்பாவை’  உங்கள் கைகளில் தவழ்கிறது.   திருமாலைத் தொழுது ஏத்தும் இறைபடியார்க்குத் ‘திருப்பாவை’ எத்துணைச் சிறப்பு வாய்ந்ததோ, சிவபெருமானை வழுத்தும் இறையன்பர்க்குத் ‘திருவெம்பாவை’ எவ்வளவு சிறப்பு மிக்கதோ, அவ்வளவு சிறப்பும் சீர்மையும் கொண்டதாகத் தமிழன்பர் அனைவரும் கொண்டாட வேண்டிய நூல் இந்தத் ’திருத்தமிழ்ப்பாவை’ என்பதனை இந்நூல் கற்று முடிந்தவுடன் நீங்கள் உணர்வீர்கள்.   இன்றைய காலச்சூழல் ஒரு விந்தையான சூழல் என்பதனைத்…

திருத்தமிழ்ப்பாவை – மின்னூர் சீனிவாசன் அணிந்துரை

கவிஞர் வேணு. குணசேகரன் இயற்றிய திருத்தமிழ்ப்பாவை  பாசுரப் பாவலரின் வெற்றிப் படைப்பு     தமிழ்த்தாய் விழைந்த வண்ணமும் கட்டளைப் படியும் ‘திருத் தமிழ்ப்பாவை’ உருவாக்கப் பட்டதாய் நூலாசிரியர் கவிஞர் வேணு. குணசேகரன் உரைத்து, நேயர் கரங்களில் அதனைத் தவழவிடுகிறார்.   நாம் பனுவலைப் பயின்றோம், பாசுரங்கள் பொற்புச் சரங்கள், பொற்பூச் சரங்கள் என அமைந்து வியப்பு நல்குகின்றன.   சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் முக்கால நோக்குடன் – பண்பாட்டு நிலை, இலக்கியச் சால்பு, வருங்காலக் கனவும் திட்டமும் ஆகிய திறம் அமையப்…

‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : வேணு குணசேகரன்

(திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் தொடர்ச்சி) ‘ திருத்தமிழ்ப்பாவை’ – பாசுரங்கள் 1 & 2 : முதல் பாசுரம் அச்செல்வி பற்றி அணிந்துரையான் செய்வேன் காண்! உச்சித் தலைமுதலாய் உள்ளங்கால் மட்டுமெழில் மெச்சி வியக்குமொரு மாண்புடைய மூதாட்டி; இச்சையுற வைக்கும் இளங்கன்னி; விண்ணுலகத் தச்சன்மயன் செய்த சிலையாள்; விழிமயங்கும் பச்சைவயல்; செங்கரும்புப் பால்சுவையாள்; சொல்லினியாள்! நச்சினார் ஏத்தும் ‘திருத்தமிழ்ப் பாவை’யினை மெச்சிப் புகழ்பாடக் கண்திறவாய், எம்பாவாய்! இரண்டாம் பாசுரம் அண்டம்சூழ் அன்னைத்தமிழ் உலகுவப்ப, ஓர்நிரைச்சொல் ஒண்டமிழ்ப்பேர் பூண்டு, நிலவுவெளி அண்டம் நிரப்ப,ஊற்…

திருத்தமிழ்ப்பாவை : இறைவணக்கமும் தமிழ் வணக்கமும் – வேணு குணசேகரன்

திருத்தமிழ்ப்பாவை தமிழ்த்தாயின் கட்டளை ஏற்றுத் ‘ திருத்தமிழ்ப்பாவை’ பாடினேன் கவிஞர் வேணு குணசேகரன் தமிழ்த்தாய் தைத்திங்கள் பிறக்குமுன் எமக்கொரு கட்டளை இட்டாள். அந்தக் கட்டளையை எம்மால் முதலில் சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்கு எமது சிற்றறிவே காரணம்.  மார்கழியில் வைணவர்கள் திருப்பாவையையும், சைவர்கள் திருவெம்பாவையையும் ஓதி மகிழ்வதுபோலத் தமிழ்த்தாயும் தமக்கென ஒன்றைச் செய்யுமாறு பணித்திருக்கும் அந்த நுண்ணிய கட்டளையை அவளருளாலே பின்னர்ப் புரிந்து கொண்டேன். ஆயின் அது எம்மால் இயலுமா என்று கொஞ்சம்கூடச் சிந்திக்கவில்லை.   மாறாகத், திருப்பாவை, திருவெம்பாவைப் பாசுரங்களைப்போல, அவள்…