தெய்வமாக விளங்குவீர் நீரே ! – பாரதியார்
இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே ! இயந்திரங்கள் வகுத்திடுவீரே ! கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே ! கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே ! அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடுவீரே ! பெரும் புகழ் நுமக்கே இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு நீரே !! மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே ! மரத்தை வெட்டி மனை செய்குவீரே ! உண்ணக் காய்கனி தந்திடுவீரே ! உழுது நன்செய்ப் பயிரிடுவீரே ! எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே ! இழையை நூற்று நல்லாடை செய்வீரே…