பிளவுபட்ட கூரை – புலவர் இரா.இளங்குமரன்

‘அ…….ன்’ ‘‘மேலே காட்டிய குறியின் பொருள் யாது?   தமிழ்நாட்டில் தேசியக் கல்வி நடைபெற வேண்டுமாயின் அதற்கு அகர முதல் னகரப் புள்ளி இறுதியாக எல்லா விவரங்களும் தமிழ் மொழியில் நடக்க வேண்டும் என்பது பொருள். தொடக்க விளம்பரம் தமிழில்  வெளியிடப்பட வேண்டும். பாடசாலைகள் தொடங்கினால் அங்கு நூல்களெல்லாம் தமிழ்மொழி வாயிலாகக் கற்பிக்கப்படுவது மன்றிப் பலகை, குச்சி எல்லாவற்றுக்கும் தமிழிலே பெயர் சொல்ல வேண்டும். ‘சிலேட்’, ‘பென்சில்’ என்று சொல்லக் கூடாது.’’   ‘’கும்பகோணம் தமிழாசிரியர் ஒருவர்; அவர் இலக்கணமாகவே பேசுவார்; பிறர்க்கு எளிதில்…

எல்லாம் தமிழில் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய் – பாரதியார்

  தமிழா, பயப்படாதே, ஊர்தோறும் தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் போட்டு ஐரோப்பிய சாத்திரங்களை எல்லாம் தமிழில் கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய். சாதி வேற்றுமைகளை வளர்க்காதே. ‘சாதியிரண்டொழிய வேறில்லை’ என்ற பழந்தமிழ் வாக்கியத்தை வேதமாகக் கொள். பெண்ணை அடிமை என்று கருதாதே. முற்காலத்துத் தமிழர் மனைவியை “வாழ்க்கைத் துணை” என்றார். ஆத்மாவும் சக்தியும் ஒன்று. ஆணும் பெண்ணும் சமம். தமிழா, உன் வேலைகள் அனைத்திலுமே பொய்க் கதைகள் மிதமிஞ்சி விட்டன. உனது மதக் கொள்கைகள், லௌகீகக் கொள்கைகள், வைதிக நடை-எல்லாவற்றிலுமே பொய்கள் புகுந்து தலைதூக்கி ஆட…

தெய்வமாக விளங்குவீர் நீரே ! – பாரதியார்

  இரும்பைக்  காய்ச்சி உருக்கிடுவீரே ! இயந்திரங்கள்  வகுத்திடுவீரே ! கரும்பைச்  சாறு  பிழிந்திடுவீரே ! கடலில்  மூழ்கி  நன்முத்தெடுப்பீரே ! அரும்பும் வேர்வை உதிர்த்து புவிமேல் ஆயிரம்  தொழில் செய்திடுவீரே  ! பெரும் புகழ்  நுமக்கே  இசைக்கின்றேன் பிரமதேவன் கலை இங்கு  நீரே !!   மண்ணெடுத்து  குடங்கள்  செய்வீரே ! மரத்தை வெட்டி  மனை  செய்குவீரே ! உண்ணக்  காய்கனி  தந்திடுவீரே ! உழுது  நன்செய்ப் பயிரிடுவீரே ! எண்ணெய்  பால்  நெய்  கொணர்ந்திடுவீரே ! இழையை  நூற்று  நல்லாடை  செய்வீரே…