உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்தைப் பழிவாங்குவதா? – சீமான்

உணவுப்பாதுகாப்புச் சட்டத்தை ஏற்காததால் தமிழகத்திற்கு வழங்கும் அரிசியின் விலையை உயர்த்திப் பழிவாங்குவதா?  – மத்திய அரசுக்குச் சீமான் கண்டனம்!  இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஒட்டுமொத்தத் தமிழகமும் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் சற்றும் சலனமில்லாது தமிழர்களுக்கு இன்னொரு வஞ்சகத்தை இழைக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறது மத்தியில் ஆளும் மோடி அரசு. மத்திய அரசின் உணவுப்பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டபோது தமிழகமும், கேரளாவும் மட்டும்தான் அதனை ஏற்க மறுத்தன. இந்தச் சட்டம் கொண்டுவரப்படுவதற்கு…

இந்தியர் என்று உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா? -இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தியர் என்று  உரிமைகளைப் பறிப்பதும் தமிழர் என்று உயிர்களைப் பறிப்பதும்தான் இந்தியமா?   ஒருவன் எந்த நாட்டான் என்பது அரசியல் சூழலுக்கேற்ப மாறக்கூடியது. ஆனால், எந்த இனத்தான்என்பது பிறப்பிலேயே அமைந்து இறப்புவரை  – ஏன்,அதற்குப்பின்னரும் – நிலைப்பது. எனவே இந்தியன் என்பது நிலையற்றது. ஆனால் தமிழன் என்பது நிலையானது. தமிழ் மக்கள் இந்தியர்களாக அரசியல் அமைப்பின் கீழ் மாற்றப்பட்டதால் இழந்தவைதான் மிகுதி. இழப்பு என்பதும் ஒரு  முறை ஏற்பட்டதன்று. தொடர்ந்து இழப்பிற்கு ஆளாகி வருகின்றனர் தமிழ் மக்கள்.    இன்றைய, கேரள, ஆந்திர, தெலுங்கானா,…

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!

மாநில, மத்திய அரசுகளே! திருவள்ளுவரையும் திருக்குறளையும் போற்றுங்கள்!   உலக அறிஞர்களாலும் ஆன்றோர்களாலும் போற்றப்படும் நூல் திருக்குறள். சமயச்சார்பற்ற நூல்களில் உலக மொழிகளில் மிகுதியாக  மொழிபெயர்க்கப்பட்டதும், மொழிபெயர்க்கப்பட்டு வருவதும் திருக்குறள் நூல் ஒன்றே. எனவேதான் இதனை இயற்றிய திருவள்ளுவர் ஞாலப்பெரும்புலவர் எனப் போற்றப்படுகிறார்.  இல்லாத தில்லை இணையில்லை முப்பாலுக் கிந்நிலத்தே! (பாரதிதாசன்) என்பது  முப்பால் எனப்பெறும் திருக்குறள்பற்றிய இக்காலக் கருத்து மட்டுமல்ல! முக்காலத்திற்கும் பொருந்தும் திருக்குறள்பற்றிய எக்காலக் கருத்துமாகும்.  அண்ணல் காந்தியடிகள், இந்தியத் துணைக்கண்டம் ஒற்றுமையாகத் திகழக் குமரி முதல் இமயமலைவரை வாழும் அனைவரும்  …

புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும் – கனிமொழி

  சமூக நீதிக்கு எதிரான புதிய கல்விக் கொள்கையைத் தி.மு.க. கடுமையாக எதிர்க்கும்  –  நெல்லையில் கனிமொழி   மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையைக் கண்டித்துச் சமத்துவக் கல்விக்கான கூட்டமைப்பு சார்பில் பாளையங்கோட்டையில் நடந்த உண்ணா நோன்பு போராட்டத்தில் கலந்து கொண்டு  நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி  பின்வருமாறு பேசினா் : சிறுபான்மை-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராகப் புதிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. இட ஒதுக்கீடு வேண்டா என்று ஆர்.எசு.எசு. அமைப்பினர் கூறியது ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது.   கல்வியில் மாநில அரசின் உரிமையில்…

எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

எழுவர் விடுதலை – சொல்லும் செயலும் ஒன்றாக வேண்டும்!     இராசீவு கொலைவழக்கில் மாட்டிவைக்கப்பட்ட எழுவரும்  மாயவலையில் சிக்கித் தவிக்கின்றனர். வலையை அறுத்து மீட்பார் யாருமில்லாமல் அவர்களின் துன்பம் நாளும் பெருகுகின்றது.  தமிழக முதல்வரின் பேச்சு, சட்டமன்றத் தீர்மானம்,  போன்றவற்றால் இவர்கள் விடுதலைஆவார்கள் என்ற நம்பிக்கையும் தேவையற்ற அலுவலக நடைமுறைகளாலும் பாகுபாடு காட்டும் நீதிமன்றங்களின் நடைமுறைகளாலும் கானல்நீராகின்றது.   இது தொடர்பான முதல்வரின் சொல்லும்  அதிகாரிகளின் செயலும் ஒன்றாகும்வண்ணம்  அரசின் போக்கு மாற வேண்டும்.   10 ஆண்டுகளுக்கு மேலாகத் தண்டனை  துய்த்த…

வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

வீட்டிற்குள் நுழையும் இந்தி! விரட்டியடிப்போம்!      முதலாவது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் தொண்ணூறாம் ஆண்டினைக் கடக்கும் காலக்கட்டத்தில் – இரண்டாவது இந்தி எதிர்ப்புப்போரின் 50 ஆம் ஆண்டுவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில், ஏமாளித் தமிழர்கள் மீது இந்தி, ஊடகங்கள்வழி திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.   விளம்பரங்களின் நோக்கம் என்ன? மக்களைச் சென்றுசேர வேண்டும்என்பதுதானே! விளம்பரத்திற்குரிய பொருளோ செய்தியோ மக்களிடம் சேருவதைவிட இந்தி சேர வேண்டும் எனப் பா.ச.க.  துடிக்கிறது!   மத்திய அரசின் விளம்பரம், பா.ச.க.விளம்பரம், தனியார் விளம்பரம் என ஊடகங்களில் இந்தி விளம்பரம்…

முனைவர் கிரண்பேடி மத்திய அரசின் முகவரே ! முதல்வரல்லர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

முனைவர் கிரண்பேடி மத்திய அரசின் முகவரே ! முதல்வரல்லர்!   புதுச்சேரியின்  செயலாட்சியராக – துணை நிலை ஆளுநராகப்- பொறுப்பேற்றுள்ள முனைவர் கிரண்(பேடி)க்கு நம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு நிலைகளில் தன் கனவுகளை நனவாக்கி வருபவர், புதுச்சேரியிலும் தன் கனவுகளை நனவாக்கி மக்கள் பணியாற்றுவார் என எதிர்பார்க்கிறோம்.   பொதுவாக ஆளுநர் என்பது பொம்மை அதிகாரமுடைய பதவி என்பர். மத்திய அரசின் சார்பாகச் செயல்பட்டாலும், மத்திய அரசிற்கும் மாநில அரசிற்கும் இடையே இணக்கமான போக்கு இருக்கும்பொழுது மாநில அரசிற்கு மாறான போககு இருப்பின்…

மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வுகள்

இ.ஆ.ப.(IAS),இ.கா.ப.(IPS), இ.வன.ப.(IFS), இ.வரு.ப.(IRS) அதிகாரியாக ஓர் அரிய வாய்ப்பு  உங்கள் மகன் அல்லது மகளை மாவட்ட  ஆட்சியர், காவல்துறை ஆணையாளர்  மற்றும் மத்திய அரசின்  முதன்மைப் பெரும் பதவிகளை அடைய ஓர் அரிய வாய்ப்பு இந்தியக்குடிமைப்பணித்தேர்வுகள் 2016 விண்ணப்பிக்க இறுதி நாள் மே27, 2016, இரவு 11.59  இணைய இணைப்பு : http://upsconline.nic.in/mainmenu2.php  தேர்வு நாள் ஆகத்து 07, 2016 கூடுதல் விவரங்களுக்கு :  http://www.upsc.gov.in/exams/notifications/2016/CSP_IFS/CSP/CSP_2016_Engl_Notice.pdf தேர்வர்களுக்கான வழிகாட்டி : தொலைபேசி எண்கள் : 011-23385271; 011-23381125; 011-23098543 வேலை நாள்களில் காலை 10.00…

போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது

சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையத்தருகே போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது   வேளாண் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும், வறட்சியால் இழந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் சென்னை மத்தியத் தொடர்வண்டி நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட உழவர்கள் கைது செய்யப்பட்டனர்.   கடந்த பங்குனி 18, 2047 / ௩௧-௩-௨௦௧௬ (31.3.2016) அன்று இப்போராட்டம் நடைபெற்றது. “பயிர் செய்த நிலங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு விட்டன. ௬௦௦ ஆயிரம் (60 இலட்சம்) தென்னை மரங்கள்…

மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டம் : போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை

மத்திய அரசின் பாறை எரிவளித் திட்டத்துக்குத் தமிழக அரசு துணைபோனால் போராட்டம் வெடிக்கும்! – வைகோ எச்சரிக்கை   “பாறை எரிவளித் திட்டத்தைச் செயல்படுத்த முனைப்பு காட்டும் மத்திய அரசுக்குத் தமிழக அரசு துணைபோனால், சோழ மண்டல உழவர்களும், பொதுமக்களும் பெரும் சீற்றத்துக்கு ஆளாகி, கிளர்ந்து எழுந்து பெரும் போராட்டத்தை நடத்துவதற்குத் தள்ளப்படுவார்கள்” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:   தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான காவிரிப் பாசனப் பகுதிகளை முற்றாக அழிப்பதற்கு மத்திய…

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை – வைகோ

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத நிதிநிலை அறிக்கை (Budget) ! – வைகோ  “நடுவண் அரசின் பொது நிதிநிலை அறிக்கை மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை” என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: “நடுவண் நிதி அமைச்சர் அருண் செத்லி அளித்துள்ள 2016-17ஆம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையில் கடந்த இரண்டு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருந்தவைதாம் இடம் பெற்றுள்ளன. புதிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. பொருளியல் (economical) வளர்ச்சி 8.6 விழுக்காடு(%) இருக்கும் என்று போன ஆண்டு கணித்தது…