காலத்தின் குறள் பெரியார் : 7 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்  அதிகாரம் 7. தொண்டறம்.   1.அற்றார்க்கே ஒன்றாற்றி உற்றாரைப் பேணுதல் கற்றார்க்(கு) உரிய அறம். 2.தொண்டறம் என்னும்நல் தூயதோர்க் கொள்கையைக் கொண்டறம் பேணிவாழ் வோம். 3.எதிர்பார்ப்பே இன்றி இயன்றதைச்செய் அஃதே எதிர்பார்க்கும் தொண்டாம் அறம். 4.கொல்லாமை வேண்டும் உடன்பிறப்பாம் மாந்தரை வள்ளுவன்கோல் கண்ட அறம். 5.விழச்செய்தார் மாயையில் பேதையரைத் தட்டி எழச்செய்வோம் தொண்டறத் தால். 6.மறத்தால் விழவில்லை மாயையில் வீழ்ந்தோம் அறத்தொண்டால் வெற்றிகாண் போம். 7.தடியூன்றித்…

காலத்தின் குறள் பெரியார் : 6 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்   அதிகாரம் 6. கொள்கை   1.அவனவன் நாட்டை அவனவன் ஆள்தல் இவண்நிலை நாட்டல் இலக்கு. 2.பொதுவுரிமை இல்லாப் பொதுவுடைமை வேண்டோம் இதுபெரியார் தந்த அறிவு. 3.கல்வியுடன் வேலை அனைவருக்கும் கிட்டிடத்தான் செல்வோம் பெரியார் வழி. 4.தொழுதுகை ஏந்திடோம் மாற்றான் இடத்தில் உழுதுபிறர்க்(கு) ஈந்திட்ட நாம். 5.சாதிமதம் மூடச் செயல்கள் அறியாமை மோதி யழித்தல் முடிபு. 6.காதல் கலந்திடல் ஆண்பெண்  தனியுரிமை மோதல் தவிர்த்திடு வோம். 7.பெண்ஆண்…

காலத்தின் குறள் பெரியார் : 5 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் அதிகாரம் 5. பகுத்தறிவு.   1.அறிவுடன் ஆராய்ச்சி யாண்டும் துணையாய் நெறிகாத்து நிற்கும் நிலைத்து. 2.ஆராய்ச்சி ஆளும் உலகத்தை ஆய்வினைப் பேராட்சி செய்வ தறிவு. 3.மானம் அறிவாம் இரண்டையும் பேணுவோம் நாம்நம் பகுத்துணர் வால். 4.கொடுப்பாரும் கொள்ளாரும் இல்லா உலகைப் படைக்கும் பகுத்தறிவென் பார். 5.முன்னோர் உரைத்திட்டார்  மூத்தோர் வழிமொழிந்தார் என்றேபின் செல்லா திரு. 6.எப்பொருள் எத்தன்மை யார்சொன்னார் கேள்வி எழுப்புநீ வள்ளுவன் சொல். 7.மூடத்…

காலத்தின் குறள் பெரியார் : 4 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் : 3 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி)   காலத்தின் குறள் பெரியார்  அதிகாரம்  4. பெரியார் வாழ்த்து.   1.அறியார் வறியார் எளியார்க்(கு) உரியார் பெரியாரைப் போற்றும் உலகு. 2.அய்யா மொழியும் குறள்போல் உலகுக்குப் பொய்யா மொழியாம் புகல். 3.பிறப்பொக்கும் என்றார் சிறப்பினை நம்மை உரைக்கவைத் தார்பெரி யார். 4.குளிர்ப்பேச்சா அன்றுநம் அய்யாவின் பேச்சே ஒளிவீச்(சு) எனநீ உணர். 5.உண்மையைச் சொல்லத் தயங்கா அவர்குணமே வன்மையுள் எல்லாம் தலை.                                                        6.சாதி மதங்களை மோதி மிதித்தவர் நீதி அளக்குமோர்…

காலத்தின் குறள் பெரியார் : 2 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் :1 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார் : 2  அதிகாரம் 2. வள்ளுவம் போற்றுதல்   அருளே அறிவே அகத்தூய்மை மூன்றன் பொருளே பொதுமறை தான். பிறப்பால் பிரிவை வளர்ப்பார் மறுத்தே அறப்பால் பொழியும்முப் பால். பொறுப்பாய் இருப்பாய் எனத்தான் உரைக்கப் பொருட்பால் பொழியும்முப்  பால். காதலும் காமமும் சேர்ந்தே இசைந்திட வாழ்தலைச் சொல்லும்முப் பால். மொழிஇனம் நாடென்(று) எதையும் மொழியவில்லை வள்ளுவம் கொண்டபெரும் மாண்பு. உறவு மறுத்தல் அறமில்லை ஆண்பெண் உறவினில் வாழும்…

காலத்தின் குறள் பெரியார் : 3 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

(காலத்தின் குறள் பெரியார் :2 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன் தொடர்ச்சி) காலத்தின் குறள் பெரியார்  அதிகாரம் 3. வள்ளுவர் வாழ்த்து.   அறம்பொருள் காமம் பகுத்துத் தொகுத்த திறமதைப் போற்றும்இப் பார். அரும்பாவாய் அஃதும் அறப்பாவாய் ஈந்து பெரும்பேறாய் வாய்த்தாரைப்  பேண். குறும்பா குறள்வெண்பா கொண்டுநாம் உய்யப் பெரும்பா உரைத்தாரைப் பேண். வள்ளுவப் பேராசான் வாய்மொழி வையகம் உள்ளவரை வாழும் நிலைத்து. மானுடம் தான்சுவைக்கத் தேன்குடம் கொண்டுவந்த மானுடன் வள்ளுவனை வாழ்த்து. 6. ஒன்றேமுக் காலடியில் வாழ்வளந்தான் வெற்றியை இன்றுவரை வென்றதுயார் இல்….

காலத்தின் குறள் பெரியார் :1 – ச.ச.வேலரசு (எ) தமிழரசன்

காலத்தின் குறள் பெரியார் :1  அதிகாரம் 1.நூன்முகம்.   அறிவுறச் செய்தார் பெரியார் அவரைச் செறிவுற ஏற்கும் உலகு. அறிவாசான் சொல்லை அழகுக் குறளில் அறிவிக்கா விட்டால் தவறு. வள்ளுவன் வாய்ச்சொல்லை எண்ணித் துணிந்தேன்நான் தெள்ளுதமிழ் செப்பும் குறள். உள்ளத்தில் உள்ளார் பெரியார் அவரை உலகுக்(கு) உரைக்கும் குறள். உள்ளவரை நல்லமுறை தந்தவரைக் கூறத்தான் வள்ளுவரைப் பின்தொடர்ந் தேன். குறள்வெண்பா கற்றேன் பெரியார் முழக்கக் குரலென்பாக் கூறிநிற் கும். முடியா(து) எனவொரு சொல்லை நினையேல் முடியும் பெரியாரைப் பற்று. பெரியார் நெறியைக் குறள்வழித் தேர…

இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2. – நாரா.நாச்சியப்பன்

(இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – தொடர்ச்சி) இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 2.   செல்லப் பாட்டி   வெங்கட்டருடைய சிற்றன்னை கணவனை இழந்தவர். அவருக்குப் பிள்ளை கிடையாது. ஆகவே, இராமசாமியைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவளர்த்து வந்தார். சிறிய பாட்டியின் செல்லம் இராமசாமியை ஒரு முரடன் ஆக்கி விட்டது. பாட்டி வசதியில்லாதவர். ஆகவே, இராமசாமிக்குப் பழஞ்சோறும். சுண்டற்குழம்பும்தான் உணவாகக் கிடைக்கும். இராமசாமிக்கோ வடை, வேர்க்கடலை, பட்டாணி போன்ற தீனிகளில் ஆசை அதிகம். பாட்டியிடம் காசு கிடைக்காது. ஆகையால், ‘ஓசி‘ வாங்கியும்,…

இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. – நாரா.நாச்சியப்பன்

இளைஞர்களுக்குத் தந்தை பெரியார் வரலாறு 1. முன்னுரை  என் கண்மணிகளே! அன்புக் குழந்தைகளே! இப்போது உங்களுக்கு ஒரு வரலாறு சொல்லப் போகிறேன். இது நம் பெரியாருடைய வரலாறு. உங்கள் பாடப் புத்தகத்தில் பெரிய பெரிய தலைவர்களைப்பற்றி நீங்கள் படித்திருப்பீர்கள். அவர்களுக்கும். நமது பெரியாருக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. தமிழ் மக்களின் தாழ்வுக்குக் காரணமாக இருந்தவை சாதிகளும், மதங்களுமே ஆகும். பல பெரியவர்கள் சாதி வேற்றுமை கூடாது என்றார்கள். மதவெறியைப் பல அறிஞர்கள் கண்டித்திருக்கிறார்கள். நமது பெரியார் இராமசாமியோ சாதிகளே கூடாது! என்றார். மதங்களை…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)– இலக்குவனார் திருவள்ளுவன்

( தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீ‌ஙௌ) தொடர்ச்சி )   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙுங)    ஆய்வுரைப் போர்வையில் தமிழுக்கு எதிராகப் பரப்பும் கருத்துகளுக்கு எதிரான  போர்! கால ஆராய்ச்சி என்ற பெயரில் முந்தைத் தமிழின் காலத்தைப் பின்னுக்குத் தள்ளுவோருக்கு எதிரான போர்! தாய்மொழித் தமிழைப் படிப்பிப்பதால் தமிழாசிரியர்களுக்கு மறுக்கப்படும் உரிமைகளை மீட்பதற்கான போர்! என்றும் தமிழ் எங்கும் தமிழ் துலங்க  வேண்டும் என்பதற்கான போர்! அயல் மொழிகளில் மறைக்கப்படும் உயர்தனிச்  செந்தமிழ்ச் சிறப்புகளை வெளிக்கொணருவதற்கான போர்!  தமிழால் வாழ்ந்தும் தமிழையே தாழ்த்துவோருக்கு…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌ை) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீங‌‌‌ொ)  தெ.பொ.மீ. மதுரைப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரானதும் ‘தமிழக வரலாறும் பண்பாடும்’ என்னும் பாடத்தை நீக்கி விட்டு ‘இக்கால இலக்கியம்’ என்பதைக் கொணர்ந்தார். இக்கால இலக்கியம் என்னும் போர்வையில் கொச்சைத் தமிழ்நடைகள் உடைய படைப்புகள் கோலோச்சுகின்றன. இதனால் தமிழுக்கு மேலும் கேடுகள்தாம் விளைகின்றன. எழுத்து மொழியை வலியுறுத்திய பேராசிரியர் இலக்குவனாரின் கருத்துகளில் ஒன்றைக் காண்போம். “இன்று நம்மில் சிலர், ‘ மொழியின் உயிர் வழக்கு மொழியில்தான் உள்ளது. வழக்கு மொழியேதான் எழுத்து மொழியாகவும் கொள்ளப்படல் வேண்டும்…

தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை) – இலக்குவனார் திருவள்ளுவன்

[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙே) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙை)    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் தொகுதிக்கான மேலவைத் தேர்தல் வந்தது. சட்ட மன்றத்தில் போட்டியிடுவதாக இருந்த பேராசிரியர் இலக்குவனாரிடம் பாராளுமன்றத்திற்கு அனுப்புவதாகக் கூறியவர்கள் மேலவைக்காவது அனுப்பி இருக்கலாம். கழகத்தின் ஆதரவைப் பேராசிரியர் கேட்ட பொழுது நடுநிலை வகிப்பதாகக் கூறி மற்றொருவருக்கு ஆதரவான நிலையை எடுத்தனர். தமிழுக்காக அனைத்தையும் இழந்தவருடன் மற்றொருவரையும் இணையாக எண்ணி நடுநிலை வகிப்பதாகக் கூறியதை நாடகம் என்று சொல்வதல்லாமல் வேறு என்ன சொல்வது? இருப்பினும் பேராசிரியர் இலக்குவனார் முனைப்பாக…