(தமிழ்த்தாய் வணக்கம் 11-15 தொடர்ச்சி)   தமிழ்த்தாய் வணக்கம் 16-20 பூங்காவில் வாழ்வோன் பொந்தனைய இல்லத்தே பாங்காய்ச் சுழல்விசிறி பாய்ச்சுவளிக்-கேங்குதல்போல் உள்ள தமிழ்நூல் உயர்வறியார்; வேற்றுமொழி யுள்ளித் திரிவார் உழன்று! (16)   எண்ணி முயறால் இயலாத வொன்றில்லை வண்ணத் தமிழில் வடித்தெடுக்க – மண்ணில் அறிவுத் துறைச்சொல் அகராதி யாக்கம் உறல்கடிதோ அன்னய் உரை.  (17)   பெற்றதாய்க் காக.அறம் பேசும் வலிவற்றோர் முற்றும் அறிவில்லா மூடரெனக்-குற்றம் உரைப்பேனைச் சூழ்ந்தெதிர்க்க ஓரா யிரம்பேர் திரண்டாலும் அஞ்சேன் சிறிது. (18)   எங்கும் தமிழாய்…