பாரதிதாசன் 125ஆம் பிறந்தநாள் விழா, தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

தமிழ்ப் பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை இணைந்து நடத்தும் “பாவேந்தர் பாரதிதாசன் 125 ஆம் ஆண்டு பிறந்தநாள் அறக்கட்டளைச் சொற்பொழிவு” சித்திரை 11, 2047 / 27.04.2016 அன்று பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற உள்ளது. இவ்விழாவில் தமிழ்மாமணி மன்னர்மன்னன், கலைமாமணி கோ.பாரதி, புலவர் செந்தலை ந.கவுதமன் கலந்து கொள்ள உள்ளனர்.

ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை! – பாரதியார்

ஊர்கள் தோறும் தமிழ்ப்பள்ளி தேவை!  அனாவசியமான தண்டத்திற்கெல்லாம் தமிழர் பணத்தை வாரி இறைக்கிறார்கள். “கான்பரென்சு’ என்றும் “மீட்டிங்’ என்றும் கூட்டங்கள் கூடிவிடிய விடிய வார்த்தைகள் சொல்லுகிறார்கள். கிராமங்கள் தோறும் தமிழ்ப் பள்ளிக்கூடங்கள் போடுவதற்கு யாதொரு வழியும் செய்யாமலிருக்கிறார்களே! பாரதியார்: தேசியக் கல்வி (கனடாவில்  பாரதி தமிழ்க்கல்வி தொடக்க விழாவில் எடுக்கப்பட்ட படம், தினகரன்,  24.07.15)

6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம், மலேசியா

சி.பா.ஆதித்தனார் அனைத்திந்திய இதழியல் கழகம் அயல்நாட்டுத் தமிழ்க்கல்வித்துறை, தமிழ்ப்பல்கலைக்கழகம் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் 6-ஆவது இதழியல் பன்னாட்டுக்கருத்தரங்கம் கார்த்திகை 7-9, 2045 : நவ.23-25, 2014