குவைத்து நாட்டைச் சேர்ந்த முதியவர் அல் அசுமில் 110 அகவை கடந்தவர். பல நூறு ஆண்டுகள் தொன்மையான பல அரிய பொருட்களை சேகரித்து வைத்திருக்கின்றார். இவரின் இல்லம் ஓர் அருங்காடசியகம் போல் காட்சி அளிக்கிறது. அவரை அவரது இல்லத்தில் கவிஞர் செங்கை நிலவன் நண்பர்களுடன் சென்று சந்தித்துள்ளார். அவர், மிகத் தெளிவாக ஆங்கிலம் பேசுகின்றார் எனவும் இச்சந்திப்பு இனம்புரியாத மகிழ்ச்சியாக இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.