தமிழ் வளர்த்த நகரங்கள் நூற்குறிப்பு:தமிழ் வளர்த்த நகரங்கள்ஆசிரியர் : திருக்குறள்மணி, வித்துவான், செஞ்சொற் புலவர் திரு அ. க. நவநீத கிருட்டிணன்தமிழாசிரியர், ம. தி. தா இந்துக்கலாசாலை, திருநெல்வேலிதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,திருநெல்வேலி-6 சென்னை-1.1960அங்கப்ப பிள்ளை கங்காதர நவநீதகிருட்டிணன் (1921-1967) பதிப்புரை ‘என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொண்ட’ நந்தமிழ் நாட்டின்சீர் பரவுதற்குரியது. ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே’ என்று நயந்தோன்றப் பாடியுள்ள பாரதியார் உயர்ந்த கருத்தொன்றையும் உள்ளடக்கி வைத்துள்ளார். தாயோடு மொழியும் நாடும் ஒருங்குவைத் தெண்ணப்பட்டு வருதல்…